லைஃப்ஸ்டைல்
ஜவ்வரிசி காய்கறி கஞ்சி

புரதம் நிறைந்த ஜவ்வரிசி காய்கறி கஞ்சி

Published On 2020-06-10 06:00 GMT   |   Update On 2020-06-10 06:00 GMT
ஜவ்வரிசியில் அதிக அளவிலான புரதம் இருப்பதால், தசைகளை வலுவூட்டவும் செல்களைப் புதுப்பிக்கவும் ரத்த ஓட்டத்தை சீராக்கவும் செய்கிறது. இன்று ஜவ்வரிசி, காய்கறி சேர்த்து கஞ்சி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

நைலான் ஜவ்வரிசி - அரை கப்
இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன்
கேரட் - 1
பீன்ஸ் - 5
கடைந்த மோர் - அரை கப்
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
பச்சை மிளகாய் - ஒன்று
உப்பு - தேவைக்கேற்ப.



செய்முறை:

பீன்ஸ், கேரட், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஜவ்வரிசியை வெறும் வாணலியில் போட்டு லேசாக வறுத்து மிக்ஸியில் ஒன்றிரண்டாக பொடித்து கொள்ளவும்.

குக்கரில் தேவையான நீர் விட்டு உடைத்த ஜவ்வரிசி, பீன்ஸ், கேரட், பச்சை மிளகாய், இஞ்சித் துருவல் சேர்த்து 2 விசில் வரும் வரை வேகவிடவும்.

பிறகு இறக்கிவைத்து… கடைந்த மோர் உப்பு சேர்த்து கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News