லைஃப்ஸ்டைல்
3 வகை சிறுதானிய இட்லி

3 வகை சிறுதானிய இட்லி

Published On 2020-04-24 05:28 GMT   |   Update On 2020-04-24 05:28 GMT
கேழ்வரகு, கம்பு, குதிரைவாலி சேர்த்து செய்யும் இந்த இட்லி சத்து நிறைந்தது. இன்று இந்த இட்லியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:

கேழ்வரகு - 2 கப்
கம்பு - 2 கப்
குதிரைவாலி - 1 கப்
உளுந்து - 1 கப்
உப்பு - சுவைக்கேற்ப



செய்முறை:

கேழ்வரகு, கம்பு, குதிரைவாலி அரிசி மூன்றையும் நன்றாக கழுவி 6 மணிநேரம் ஊறவைக்க வேண்டும்.

உளுந்தை தனியாக 1 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

இரண்டையும் தனித்தனியாக அரைத்து, அதில் உப்பு சேர்த்து கலந்து வைக்க வேண்டும்.

அரைத்த 2 மணிநேரத்தில் இட்லி ஊற்றலாம். சுவையாக இருக்கும்.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags: