லைஃப்ஸ்டைல்
சிவப்பரிசி தேங்காய்ப் பால் பூண்டு கஞ்சி

சிவப்பரிசி, தேங்காய்ப் பால், பூண்டு கஞ்சி

Published On 2020-03-31 06:14 GMT   |   Update On 2020-03-31 06:14 GMT
சிவப்பரிசி, தேங்காய் பால், பூண்டு, சுக்கு சேர்த்து செய்யும் இந்த கஞ்சி வயிற்றுப்புண்ணை ஆற்றும். இன்று இந்த கஞ்சி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

சிவப்பு அரிசி - ஒரு கப்
முதல் தேங்காய்ப் பால் - அரை கப்
இரண்டாம் மூன்றாம் தேங்காய்ப் பால் - தலா ஒரு கப்
பூண்டு - 15 பல்
சீரகம் வெந்தயம் - தலா அரை டீஸ்பூன்
சுக்கு - சிறிய துண்டு
உப்பு - தேவையான அளவு.

 


செய்முறை:

சிவப்பரிசியை 2 மணி நேரம் ஊற வைக்கவும்.

பிறகு குக்கரில் சிவப்பு அரிசியுடன் இரண்டாம் மூன்றாம் தேங்காய்ப் பால் ஒரு டம்ளர், தண்ணீர், பூண்டு, சீரகம், வெந்தயம், சுக்கு, உப்பு சேர்த்து நன்கு வேகவிட்டு இறக்கவும்.

பிறகு அதில் முதல் தேங்காய்ப்பால் சேர்த்துப் பரிமாறவும்.

வாய்ப்புண் வயிற்றுப்புண் ஆற்றும் சத்தான கஞ்சி இது.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News