தும்மல், மூக்கடைப்பு, தலைபாரம், தலைவலி, சளித்தொல்லை இருப்பவர்கள் இஞ்சி - துளசி டீ அருந்தலாம். இன்று இந்த டீ செய்முறையை பார்க்கலாம்.
டீத்தூள் - 4 டீஸ்பூன்
தண்ணீர் - 4 கப் (அ) 5 கப்
எலுமிச்சைச்சாறு - 2 டீஸ்பூன்
தேன் - 6 டீஸ்பூன்
இஞ்சிச் சாறு - சிறிதளவு
செய்முறை
ஒரு பாத்திரத்தில் அல்லது டீ குக்கரில் தண்ணீரைக் கொதிக்க வைக்கவும்.
தண்ணீர் நன்கு கொதிக்கும்போது டீத்தூள், இஞ்சிச் சாறு, துளசியைச் சேர்க்கவும்.
உடனே 5 நிமிடம் மூடி வைத்து கொதிக்க விடவும்.
பின் ஒரு பெரிய கப்பில் தேன் தேவைக்கேற்ப சேர்த்து டீயை வடிகட்டி கலக்கி எலுமிச்சைச்சாறு சேர்த்துக் கலந்து பரிமாறவும்.
பால் இல்லாத இந்த டீ சுவையாக இருக்கும்.