லைஃப்ஸ்டைல்

சூப்பரான ராகி ஆலு பரோட்டா

Published On 2018-08-01 04:02 GMT   |   Update On 2018-08-01 04:02 GMT
டயட்டில் இருப்பவர்கள், சர்க்கரை நோயாளிகள் கேழ்வரகு, உருளைக்கிழங்கு சேர்த்து பரோட்டா செய்தும் சாப்பிடலாம். இன்று இந்த பரோட்டா செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருள்கள்  :

கோதுமை மாவு - அரை கப்
கேழ்வரகு மாவு - அரை கப்
உப்பு - தேவையான அளவு
 
ஸ்டஃப்பிங்க்கு...

உருளைக்கிழங்கு - 1
கரம்மசாலாத்தூள் - அரை ஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 ஸ்பூன்
ஒமம் - கால் ஸ்பூன்



செய்முறை :

கோதுமை மாவு, ராகி மாவு இரண்டையும் உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து அரைமணி நேரத்திற்கு மூடி ஊற விடவும்.

உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து மசித்துக் கொள்ளவும்.

மசித்த உருளைக்கிழங்குடன் உப்பு, கரம்மசாலாத்தூள், கொத்தமல்லித்தழை, ஒமம் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

மாவை சமஅளவு உருண்டைகளாக பிரித்து உருட்டி, பூரி அளவிற்கு திரட்டி உருளைக் கலவையை நடுவில் வைத்து நன்றாக மூடி கையால் தட்டி மெதுவாக திரட்டி வைக்கவும். இவ்வாறு அனைத்து மாவிலும் செய்து வைக்கவும்.

தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் பரோட்டாவை போட்டு சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி சிறிதளவு எண்ணெய் விட்டு 2 பக்கமும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.

சுவையான ராகி ஆலு பரோட்டா ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News