லைஃப்ஸ்டைல்

வீக்கத்தினை குறைத்து ஆரோக்கியத்தினை கூட்டும் பொருட்கள்

Published On 2018-07-30 02:30 GMT   |   Update On 2018-07-30 02:30 GMT
உடலின் உள்ளோ, வெளியோ ஏற்படும் வீக்கங்களை அதிகம் கவனம் செலுத்தாது இருப்பதன் காரணமே உடல் தன்னால் ஆன பாதுகாப்பு போராட்டத்தில் செயலிழக்கின்றது.
இன்றைய பல ஆய்வுகள் வருமுன் காப்போனாக பல நோய் தவிர்ப்பு முறைகளைப் பற்றி தீவிர ஆய்வுகள் செய்து வருகின்றது. அதில் நம் முன்னோர்கள் கடை பிடித்த சில வழி முறைகளையும், நோய் பாதிப்பு காலத்தில் அவர்கள் கடை பிடித்த மருத்துவ முறைகளையும் விஞ்ஞான ரீதியான ஆய்வுகளையும் ஆராய்ந்து வருகின்றது.

உடலின் உள்ளோ, வெளியோ ஏற்படும் வீக்கங்களை அதிகம் கவனம் செலுத்தாது இருப்பதன் காரணமே உடல் தன்னால் ஆன பாதுகாப்பு போராட்டத்தில் செயலிழக்கின்றது. அதன் காரணமாகவே மறதி நோய், இருதய பாதிப்பு, சர்க்கரை நோய் போன்ற பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

கீழ்கண்ட அறிகுறிகள் இருக்கின்றதா?

* சதா உடல் வலி
* சோர்வு
* அலர்ஜி
* கிருமி, பூஜ்ஞை, வைரஸ் பாதிப்புகள்
* ஆர்த்ரைட்டிஸ் பிரச்சினை
* அடிக்கடி நெஞ்சு எரிச்சல்
* புற்று நோய்
* உயர் ரத்த அழுத்தம்
* எலும்பு தேய்மானம்
* இருதய பாதிப்பு
* சிறுநீரக பை கிருமி தாக்குதல்
* சரும பாதிப்புகள், பரு உட்பட

இத்தகு பாதிப்புகள் இருந்தால் குறிப்பிட்ட ஒரு பொருளை உபயோகிக்கச் சொல்கின்றனர். இதனை சீனர்கள் வெகு காலமாக பயன்படுத்துவதாகக் கூறுகின்றனர். பெயரைக் கேட்டால் நீங்கள் ஆச்சர்யப்படுவீர்கள். வீக்கத்தினை குறைத்து ஆரோக்கியத்தினை கூட்டும் என ஆய்வுகள் கூறும் அந்த பொருளின் பெயர் ‘மஞ்சள்’. இதிலுள்ள ‘குர்குயின்’ எனும் பொருள்தான் மிகப்பெரிய நன்மையினை மனித சமுதாயத்திற்குச் செய்வதாகக் கூறுகின்றனர்.

அன்றாடம் சமையலில் மஞ்சளை சேர்ப்பதும், மஞ்சள் பூசி குளிப்பதும் நெடுங்காலமாக நம் நாட்டில் பழக்கத்தில் இருந்து வரும் ஒன்று. மஞ்சளும், குங்குமமும் (மஞ்சள் கொண்டு தயாரிப்பது) மிக மங்களகரம் என்றே வழக்கத்தில் உள்ளது. மஞ்சளின் முக்கியத்துவத்தினை நாமே முதலில் உணர்த்தியவர்கள் என்றாலும் இன்று அது விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது நமக்கு பெருமையே. ஆனால் அது மட்டும் போதாது. முறையாக அதனை பயன்படுத்த வேண்டும்.

நாகரீகம் என்ற பெயரில் அனைத்து நன்மை தரும் நமது உணவு முறைகளை மாற்றியதன் விளைவே இன்று அனைத்து மருத்துவமனைகளும் நிரம்பி வழிகின்றன.

ஆக நம் பாரம்பரிய உணவு முறைக்கு மாறுங்கள். உணவில் மஞ்சள், ஜீரகம், மிளகு, இஞ்சி, எலுமிச்சை பழம் இவற்றினை அன்றாடம் உபயோகியுங்கள். பொதுவில்

* அதிகம் பதப்படுத்தப்பட்ட உணவுகள்
* அதிக எடை
* அதிக மனஉளைச்சல்
* சுற்று சூழல் நஞ்சு
* உணவு அலர்ஜி
* தேவையான அளவு தூக்கமின்மை.

இவைகளே வீக்கங்களுக்கு காரணமாகின்றன எனவும் ஆய்வுகள் கூறுகின்றன. இவற்றினை சரி செய்ய ஆரம்பித்தால் நோயின்றி ஆரோக்கியமாய் வாழ முடியும்.
Tags:    

Similar News