லைஃப்ஸ்டைல்

தூக்கமின்மையால் அவதிப்படுபவர்களுக்கான முத்திரை

Published On 2018-12-03 05:45 GMT   |   Update On 2018-12-03 05:45 GMT
நடு இரவில் எழுந்தாலோ, தூக்கமின்மையால் அவதிப்படுபவர்களோ இந்த முத்திரையைத் தினமும் இரவு செய்துவர தூக்கம் கண்களைத் தழுவும். இந்த முத்திரை செய்முறையை பார்க்கலாம்.
செய்முறை :

வலது கை:

ஆள்காட்டி விரல் மற்றும் கட்டை விரலின் நுனிகள் தொட்டிருக்க வேண்டும். மற்ற விரல்கள் நீட்டி இருக்க வேண்டும்.

இடது கை:

சுண்டு விரல் மற்றும் கட்டை விரலின் நுனிகள் தொட்டிருக்க வேண்டும். மற்ற விரல்கள் நீட்டி இருக்க வேண்டும்.

பலன்கள் :

சரியாகத் தூங்கவில்லை எனில், கட்டாயம் உயர் ரத்த அழுத்தப் பிரச்சனை இருக்கும்.

உணவு உண்டு, அரை மணி நேரம் கழித்து, படுத்த பிறகு இந்த முத்திரையைச் செய்யலாம்.

இந்த முத்திரையைச் செய்துகொண்டு இருக்கும்போதே தூக்கம் வந்துவிடும். நடு இரவில் எழுந்தாலோ, தூக்கமின்மையால் அவதிப்படுபவர்களோ இந்த முத்திரையைத் தினமும் இரவு செய்துவர தூக்கம் கண்களைத் தழுவும்.
Tags:    

Similar News