லைஃப்ஸ்டைல்
டி.வி பார்க்கும் குழந்தைகளின் அறிவாற்றல் திறன் அதிகரிக்கும்

டி.வி பார்க்கும் குழந்தைகளின் அறிவாற்றல் திறன் அதிகரிக்கும்

Published On 2021-09-16 03:49 GMT   |   Update On 2021-09-16 03:49 GMT
குழந்தைகள் வாசிப்பதிலோ, எழுதுவதிலோ ஏதேனும் சிரமங்களை எதிர்கொண்டால் ஒளிரும் திரைகள் முன்பு சிறிது நேரத்தை செலவிட வைக்கலாம் என்கிறது ஆய்வு.
வாசிப்பு மற்றும் எழுதும் பழக்கத்தை குழந்தைகள் ஆர்வமாக தொடர்வதற்கு ஊக்குவிக்க வேண்டும். இந்த விஷயத்தில் சில பெற்றோர் போதிய அக்கறை காண்பிப்பதில்லை. குறிப்பிட்ட வயதுக்கு பிறகு தாங்களாகவே வாசிக்க, எழுத பழகிவிடுவார்கள் என்று நினைக்கிறார்கள். இந்த பிரச்சினைக்கு ஆரம்பகட்டத்திலேயே முற்றுப்புள்ளி வைத்துவிட வேண்டும்.

இல்லாவிட்டால் பின்னாளில் அறிவாற்றல் குறைபாட்டை ஏற்படுத்திவிடும். குழந்தைகள் வாசிப்பதிலோ, எழுதுவதிலோ ஏதேனும் சிரமங்களை எதிர்கொண்டால் ஒளிரும் திரைகள் முன்பு சிறிது நேரத்தை செலவிட வைக்கலாம் என்கிறது ஆய்வு.

டி.வி. முன்பு நேரத்தை செலவிடும்போது கவனம் முழுவதும் ஓரிடத்தில் குவிக்கப்படும். அதன் மூலம் குழந்தைகளின் அறிவாற்றல் திறன் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். இது குறித்து ஆய்வை மேற்கொண்ட வெஸ்டர்ன் நார்வே பல்கலைக்கழக பேராசிரியர் கோரன் சோடர்லண்ட் குறிப்பிடுகையில், ‘‘வாசிப்பதில் தடுமாற்றம், எழுதுவதில் சிரமம் கொண்ட குழந்தைகளை பள்ளியிலோ, வீட்டிலோ டி.வி. திரை முன்பு அமர செய்யலாம்.

அதில் வெளிப்படும் காட்சியும், சத்தமும் அவர்களின் பிரச்சினையை சரிப்படுத்த உதவும், அறிவாற்றல் திறனை அதிகரிக்கக்கூடும் என்பதை கண்டறிந்திருக்கிறோம். எனினும் கூடுதல் ஆய்வு மேற்கொள்ள வேண்டியிருக்கிறது’’ என்கிறார்.
Tags:    

Similar News