லைஃப்ஸ்டைல்
குழந்தை வளர்ப்பில் இன்றைய பெற்றோர்களின் பொறுப்பு

குழந்தை வளர்ப்பில் இன்றைய பெற்றோர்களின் பொறுப்பு

Published On 2021-04-07 03:26 GMT   |   Update On 2021-04-07 03:26 GMT
தொழில்நுட்பம் வளர்ந்த இன்றைய சமூக சூழலில் குழந்தை வளர்ப்பு என்பது சிக்கலானதாக மாறி வருகிறது. பெற்றோர்கள், குறிப்பிட்ட நேரத்தை குழந்தைகளோடு செலவழித்து அவர்களது நலனுக்கு என்ன செய்ய முடியும் என்பதை பற்றி ய சிந்தனை தொகுப்பே இது.
தொழில்நுட்பம் வளர்ந்த இன்றைய சமூக சூழலில் குழந்தை வளர்ப்பு என்பது சிக்கலானதாக மாறி வருகிறது. சமூக ஊடகங்கள், வெளியுலத் தொடர்புகள், தகவல் பரிமாற்றங்கள் என பல காரணிகள் குழந்தைகளின் குணநலனை கட்டமைக்கின்றன. பெற்றோர்கள், குறிப்பிட்ட நேரத்தை குழந்தைகளோடு செலவழித்து அவர்களது நலனுக்கு என்ன செய்ய முடியும் என்பதை பற்றி ய சிந்தனை தொகுப்பே இது.

குழந்தைக்கு முதலில் அன்பாக பேச கற்றுத்தர வேண்டும். அதற்கு முதலில் பெற்றோர் அன்பாக பேச வேண்டும். பெற்றோர் வழியில் தான் குழந்தைகளும் நடப்பார்கள் என்பது பொதுவான உண்மையாகும்.

எப்போதும் குழந்தைகளுக்கு நல்ல சொற்களை பேச கற்று கொடுங்கள். குழந்தைகள் இருக்கும் போது வசவுச்சொற்களை பயன்படுத்த வேண்டாம். பள்ளியில் அல்லது விளையாட செல்லும் இடங்களில் குழந்தை பிற குழந்தைகளிடம் இருந்தோ அல்லது சுற்று வட்டார நபர்கள் மூலமாகவோ தவறான சொற்களை கற்று கொள்ளலாம். வார்த்தைகளை எப்படி பயன்படுத்த வேண்டும் என எடுத்துசொன்னால் குழந்தைகள் புரிந்து கொள்வார்கள்.

அனைவரும் வேலையை விரைவாக முடித்து விட்டு வீடு திரும்பவும் தங்கள் தேவைகளை பார்த்து கொள்ளவும் முயற்சிக்கிறார்கள். வீட்டிலும் அப்படி இல்லாமல் பெரியோர்களையும் உறவினர்களையும், நண்பர்களையும் மதித்து நடப்பதன முக்கியத்துவத்தை குழந்தைகளிடம் வலியுறுத்த வேண்டும். கொடுத்தால் திருப்பி கிடைப்பதில் மரியாதையும் ஒன்று என்பதை அவர்கள் மனதில் பதிவு செய்ய வேண்டும்.

இன்று பல குழந்தைகள் உறவினர்களை பிரிந்து தாய், தந்தையோடு அடுக்குமாடி குடியிருப்பில் யாரிடமும் பேசாமல் வாழ்கின்றனர். பெற்றோர் வேலைக்கு சென்று விடுவதால் குழந்தை தனிமையில் இருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அதனால் பல விஷயங்களில் எப்படி நடந்த கொள்வது எப்படி சூழலை சமாளிப்பத என்று தெரியாமல் பயம் கொள்கிறார்கள். கவமாக இருக்க வேண்டுமே தவிர பயந்து போய் இருக்க வேண்டியதில்லை என்பதை குழந்தைகளுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

குழந்தைகள் உற்சாகத்தோடு இருக்க வேண்டும். ஆனால் தற்போதைய நிலைமை நேர்மாறாக உள்ளது. காரணம் அவர்கள் உண்ணும் உணவு மற்றும் வாழ்க்கை முறை தான். அவர்கள் சுறுசுறுப்பாக பிற குழந்தைகளோடு கூடி விளையாடும் சூழலை உருவாக்க வேண்டும். பெற்றோர்களும் குழந்தையோடு விளையாடி சிரித்து மகிழ வேண்டும். நிறைய வெளி இடங்களுக்கு அவர்களை அழைத்து செல்ல வேண்டும்.

விரும்பிய பொருளோ அல்லது விஷயமோ பெற்றோர், உறவினர்கள, நண்பர்கள் அல்லது பிற மனிதர்கள் மூலம் கிடைக்க நேர்ந்தால் உடனே அவர்களுக்கு நன்றி சொல்லும் பண்பை கற்றுகொடுங்கள். அது நன்றி உணர்வை அதிகரித்து அவர்களை பண்பாளராக வளரச்செய்யும்.
Tags:    

Similar News