லைஃப்ஸ்டைல்

பிறந்த குழந்தையை கோடைக்காலத்தில் பாதுகாப்பது எப்படி?

Published On 2018-04-11 07:26 GMT   |   Update On 2018-04-11 07:26 GMT
உங்கள் குழந்தை பிறந்து சில மாதங்களே ஆகியிருந்தால் கோடை வெயிலில் இருந்து உங்கள் குழந்தையை காக்க நீங்கள் பல மடங்கு அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
கோடைக்காலம் என்பது நம்மை போன்றவர்களையே வாட்டி வதக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் வேண்டாம். அப்படி இருக்க, பிறந்த மாத குழந்தைகள் எப்படி உணர்வார்கள்? பாவம், நம்மால் தாக்கத்தை வெளிப்படையாக சொல்லிவிட முடியும். ஆனால், அவர்களோ அழமட்டுமே செய்வார்கள்.

உங்கள் குழந்தைகள் பிறந்து அனுபவிக்கும் முதல் கோடைக்காலமெனில், நீங்கள் குழந்தையின் மீது பல மடங்கு அதிக அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

குழந்தை பிறந்த முதல் 6 மாதங்களுக்கு நீங்கள் ஊட்டும் எந்த ஒரு உணவையும் ஏற்றுக்கொள்ள மறுத்து அழவே செய்வார்கள். அதனால் நீங்கள் முதன்மையாக அவர்களுக்கு தர வேண்டியது தாய்ப்பால் மட்டுமே ஆகும். முதல் 6 மாதங்களுக்கு தாய்ப்பால் என்பது மிகவும் உங்கள் குழந்தைக்கு அவசியமாக அமைகிறது. தாய்ப்பால் மட்டுமே உங்கள் குழந்தையை ஆரோக்கியமாகவும், தேவையான ஊட்டச்சத்துக்களையும் தரும். அவர்களுடைய 6 மாதத்திற்கு பிறகு பழங்களையும், காய்கறிகளையும் கூட சேர்த்து தரலாம்.



உங்கள் குழந்தைகள் அறையில் எப்போதும் போதுமான அளவு குளிர் மற்றும் வெப்ப தன்மை இருக்கிறதா? என்பதை அடிக்கடி நீங்கள் பார்க்க வேண்டியது அவசியம்.

குழந்தைகள் அணியும் ஆடை என்பது பருத்தியினால் ஆனதாக இருக்க வேண்டியது அவசியமாக சருமத்தை இறுக்கும் ஆடையாக இல்லாமல் இருத்தல் வேண்டும். அதாவது குழந்தையின் ஆடைக்கும் அவர்கள் சருமத்திற்கும் காற்றுப்புகும் அளவு இடைவெளி என்பது காணப்பட வேண்டியது அவசியம். இரு அடுக்குகளாக அவர்கள் ஆடை இருப்பது நல்லது. இதனால் வியர்க்கும்போது மேல் ஆடையை நீக்கி அவர்களுக்கு தேவையான காற்றோட்ட வசதியை நீங்கள் ஏற்படுத்தி தரலாம்.

குழந்தைகளை சுத்தமாக வைத்துக்கொள்ள அவர்கள் உடல் அளவு வெப்பத்தை அவ்வப்போது கவனித்தபடி நீங்கள் இருக்க வேண்டும். குழந்தைகளின் இரண்டு மாதத்திற்கு பிறகு தினமும் குளிப்பாட்டுவதன் மூலமாக அவர்கள் சுறுசுறுப்பை அதிகரிக்க செய்யலாம்.
Tags:    

Similar News