பெண்கள் உலகம்
குழந்தைகளுக்கு வாழ்க்கைப் பாடமாகும் ‘சாப்பாட்டு மேஜை’
குழந்தைகளுக்கு நல்ல பழக்க வழக்கங்களை கற்று தர வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் அதற்கு சரியான இடம், உங்கள் வீட்டு சாப்பாட்டு மேஜைதான்.
குழந்தைகளுக்கு நல்ல பழக்க வழக்கங்களை கற்று தர வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் அதற்கு சரியான இடம், உங்கள் வீட்டு சாப்பாட்டு மேஜைதான். இதனை சரியான முறையில் நீங்கள் தொடங்கவேண்டுமானால், முதலில் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் வழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அந்த பழக்கம் உருவான பின்பு குழந்தைகளுக்கு எப்படி சரியாக சாப்பிடுவது என்பதை கற்றுக்கொடுக்கவேண்டும். அதன் மூலம் அவர்கள் சிறந்த வாழ்க்கை பாடத்தை கற்றுக்கொள்வார்கள்.
உணவை கீழே சிந்தாமல் சாப்பிடுவதும் குழந்தைகளுக்கு தரவேண்டிய சிறந்த பயிற்சி. தேவையான அளவுக்கு மட்டும் உணவு வகைகளை தேர்ந்தெடுத்து எடுத்து வைத்துக்கொண்டு வீணாக்காமல் சாப்பிடுவதற்கு பழக்கப்படுத்தவேண்டும். இது தேவை, பகிர்வு, கவனம் சிதறாத செயல் போன்றவைகளை குழந்தைகளுக்கு கற்றுத்தரும்.
குழந்தை பிறந்த ஆறு மாதத்தில் இருந்து தனது பெற்றோர் எப்படி சாப்பிடுகிறார்கள் என்பதை பார்த்துக்கொண்டே வளரும். அவர்கள் எப்படி சாப்பிடுகிறார்களோ அதே முறையில்தான் குழந்தையும் சாப்பிடத்தொடங்கும். அதனால் குழந்தைகள் பிறந்த பின்பு, முதலில் பெற்றோர் சரியாக சாப்பிடக் கற்றுக்கொள்ளவேண்டும். சாப்பாட்டு மேஜை நாகரிகத்தையும் கடைப்பிடிக்கவேண்டும். அதை பார்த்து குழந்தைகள் பழகவேண்டும்.
குழந்தைகளின் செயல்திறனை ஆராயும் ஆராய்ச்சியாளர்கள் சிலர், அந்த குழந்தைகளை சாப்பாட்டு மேஜையில் அவர் களது இஷ்டத்திற்கு சாப்பிட அனுமதித்தார்கள். அவர்கள் எந்த மாதிரியான உணவுகளை தேர்ந்தெடுத்தார்கள். அதை எப்படி தங்கள் சாப்பாட்டுத்தட்டில் எடுத்துவைத்தார்கள். எப்படி சாப்பிட்டார்கள். அப்போது அருகில் அமர்ந்திருக்கும் குழந்தைகளிடம் எப்படி அணுகினார்கள் என்பதை எல்லாம் கண்காணித்தார்கள்.
அதன் மூலம் அவர்களது செயல்திறனை அளவிட்டார்கள். அவர் களது இயல்பு என்ன? அவர்களிடம் எதிர்காலத்தில் எத்தகைய மாற்றங்கள் தேவைப்படும் என்பதை எல்லாம் கணித்தார்கள். அந்த குழந்தைகளின் மூளை வளர்ச்சி சரியாக இருக்கிறதா என்பதையும் அவர்களது சாப்பாட்டு முறை மூலம் கண்டறிந்துவிட்டார்கள்.
அதே நேரத்தில் அந்த குழந்தைகளின் வீட்டுச்சூழல் எப்படி இருக்கிறது என்பதையும் அவர்களது உணவுப் பழக்கம் மூலம் தெரிந்துகொண்டார்கள். பெற்றோர்கள் அவர்களது குழந்தைகளிடம் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதையும், அவர்கள் சாப்பிடும் முறை மூலம் தெரிந்துகொள்ளலாம் என்றும் சொல்கிறார்கள்.
அந்த ஆராய்ச்சியாளர்கள், “உங்கள் குழந்தைகளுக்கு சிறு பருவத்தில் இருந்தே சாப்பாட்டு மேஜை நாகரிகத்தை கற்றுக்கொடுங்கள். அது அவர்களை சிறந்த பண்புள்ளவர்களாகவும், சமயோசித திறன் கொண்டவர்களாகவும் உருவாக்கும்” என்று பரிந்துரைக்கிறார்கள்.
குழந்தைகளுக்கு எந்த உணவை முதலில் சாப்பிட வேண்டும், எதை கடைசியாக சாப்பிட வேண்டும் என்பதை கற்றுக்கொடுக்க வேண்டும். அதே போல் குழந்தைகளை எல்லாவித உணவுகளையும் சாப்பிட பழக்க வேண்டும். அப்போதுதான் உடலுக்கு தேவையான எல்லா சத்துக்களும் கிடைக்கும். எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுவதால் அவசர அவசரமாக சாப்பிடுவது தவிர்க்கப்படும். உணவை நன்றாக மென்று சாப்பிடவும், தேவையான இடைவெளி விட்டு சாப்பிடவும் கற்றுக்கொண்டால் உணவு எளிதில் செரிமானமாகும். குழந்தைகளுடன் உட்கார்ந்து சாப்பிடும்போது மனதில் மகிழ்ச்சி ஏற்படும். அதன் மூலம் நெருக்கமான உறவு பேணப் படும்.
சாப்பிடும்போது நல்ல விஷயங்களை பேச வேண்டும். திகிலான விஷயங்களையும், பிரச்சினைக்குரிய விஷயங்களையும் பற்றி பேசக்கூடாது. பயந்த சுபாவத்துடன் அமர்ந்து சாப்பிடக் கூடாது. தொலைக்காட்சியில் சண்டை, சச்சரவுக்குரிய காட்சிகளை பார்த்தபடி சாப்பிடுவது பலருக்கும் பழக்கமாகிவிட்டது. அது நல்ல பழக்கமல்ல. தொலைக்காட்சி மீதே முழு கவனத்தையும் பதிக்கும்போது, சாப்பிடும் உணவின் ருசி கூட தெரியாமல், இவ்வளவு நேரம் என்ன சாப்பிட்டோம் என்பது கூட புரியாமல் சாப்பிட்டு விடுவார்கள்.
சாப்பிடும் உணவுப் பொருட் களின் தன்மையை உணர்ந்து சாப்பிட வேண்டும். ‘இது நம் உடலுக்கு குளிர்ச்சி தரும், இது புரத சத்து நிறைந்தது’ என்பதை உணர்ந்து சாப்பிடும்போது அந்த விஷயம் நம் புற மனதில் பதிவாகி பின் ஆழ் மனதில் பதிவாகி, தனக்கு எது தேவை? எது தேவையில்லை என்ற தெளிவை உருவாக்கி விடும். இதன் மூலம் தனது உடலுக்கு பொருந்தக்கூடிய உணவை தேர்ந்தெடுக்க குழந்தைகள் பக்குவப்பட்டுவிடுவார்கள்.
எல்லா உணவுகளிலும் பல்வேறுவிதமான சத்துக்கள் இருக்கின்றன. அதை குழந்தைகளுக்கு ஒவ்வொரு முறை சாப்பிடும்போதும் சொல்ல வேண்டும். அதன் மூலம் குழந்தைகள் சத்துக்களை உணர்ந்து, ஆரோக்கியமிக்கவர்களாக மாறுவார்கள்.
பகிர்ந்து உண்ணும் பழக்கம் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும்போதுதான் உருவாகும். ‘டேபிள் மேனர்ஸ்’ என்பதும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடும்போதுதான் பழக்கத்திற்கு வரும்.
எந்த ஒரு நல்ல பழக்கமும் தானாக வந்து விடாது. எல்லாமுமே வழக்கத்தில் வருவதுதான். திருவிழாக்கள், கொண்டாட்டங்கள், பண்டிகைகள் எல்லாம் இப்படி ஒற்றுமையாக அமர்ந்து பகிர்ந்து சாப்பிடும் வழக்கத்தை ஏற்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்டவை. நாளடைவில் அந்த வழக்கம் சுருங்கி போய்விட்டது. அதிலும் நகர வாழ்க்கையில் அதற்கெல்லாம் நேரமில்லாமல் போய்விட்டது.
ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவது நம் நாட்டு வழக்கம் மட்டுமல்ல. மேலை நாடுகளிலும் இதுபோன்ற வழக்கம் உள்ளது. குடும்பத்தில் உள்ளவர்களது அன்பை பகிர்ந்து கொள்ள இது சிறந்த வழி.
ஆப்பிரிக்க நாடுகளில் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் எல்லோரும் ஒன்றுகூடி சாப்பிடுவதற்கென்றே அடிக்கடி சமூக நிகழ்ச்சிகளை நடத்துவார்கள். ஊர் மக்கள் ஒன்று கூடி மொத்தமாக சமைத்து எல்லோரும் பகிர்ந்து உண்பார்கள். அப்போது மேள தாளத்துடன் பாரம்பரிய நடனங்களும் நடக்கும். உணவுடன் சேர்ந்து மகிழ்ச்சியும் பரிமாறப்படும். ஆதிவாசிகள் இன்றும் இந்த வழக்கத்தை தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறார்கள்.
ஆராய்ச்சியாளர்கள் இதுபற்றி பல உண்மைகளை ஆய்வு செய்து வெளியிட்டிருக்கிறார்கள். மகிழ்ச்சி உணவை எளிதாக செரிக்கச் செய்கிறது. உடல் அந்த உணவை விரைவாக ஏற்றுக்கொள் கிறது.
இந்த ஆய்வு இரண்டு பூனைகளிடம் மேற்கொள்ளப்பட்டது. ஒரு பூனையை கூட்டத்தோடு சேர்த்து உணவெடுத்துக்கொள்ளச்செய்தார்கள். இன்னொன்றை தனிமைப்படுத்தி உணவு வழங்கினார்கள். தனியாக சாப்பிட்ட பூனையிடம் பயமும், தயக்கமும், மிரட்சியும் காணப்பட்டது. அது உட்கொண்ட உணவு சரியாக செரிமானமாகவில்லை. ஆனால் கூட்டத்தோடு சாப்பிட்ட பூனையிடம் மகிழ்ச்சியும், ஆரோக்கியமும் நிறைந்திருந்தது. அது எந்த தயக்கமுமின்றி இயல்பாக எல்லோரிடமும் பழகியது. இந்த ஆய்வு கூட்டத்தோடு சேர்ந்து சாப்பிடுவதால் கிடைக்கும் பலன் பற்றி வெளிஉலகுக்கு தெரியப் படுத்தியது.
நாம் சாப்பிடும் உணவு அத்தனையும் உடனடி சக்தியாக மாறி உடலுக்கு கிடைத்துவிடுவதில்லை. அதனால் சாப்பிட்டதும் நம் கடமை முடிந்துவிட்டது என்று நினைத்துவிடக்கூடாது. சாப்பிட்ட உணவு சக்தியாக மாறவேண்டும் என்றால், அதை எப்படி, யாருடன் சேர்ந்து சாப்பிடுகிறோம் என்பது முக்கியம். அதனால்தான் ஐந்தறிவுள்ள ஜீவன்கள் கூட உணவை தன் இனத்துடன் பகிர்ந்து உண்ணவே விரும்புகிறது.
நம் முன்னோர்களும் விழாக்கள், விசேஷங்கள் வழியாக தங்கள் வாழ்வியலில் பகிர்ந்து உண்ணும் பழக்கத்தை பலவழிகளில் பின்பற்றி வந்தார்கள். அதனை பின்பற்ற பலரும் முயற்சி செய்து வருகிறார்கள். ஆனால் நேரம் அதற்கு இடம் தருவதில்லை. வாழ்க்கை முறையும் மாறிவிட்டது. இருந்தபோதிலும் வாரத்தின் விடுமுறை நாட்களில் மட்டுமாவது இந்த பழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும்.
சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகள் கூட மற்றவர்கள் சாப்பிடுவதை பார்த்து தானும் அதுபோல் சாப்பிட விரும்புவார்கள். பள்ளியில் அன்றைய தினம் சந்தித்த தன் அனுபவங்களை பரிமாறிக் கொள்ளவும் ஆசைப்படுவார்கள். அவர்களுடன் அமர்ந்து சாப்பிடும்போது, அவர்களுக்கு பிடித்த உணவு எது என்பதை கண்டறியவும் வசதியாக இருக்கும்.
அவர்களுக்கு ஏதேனும் ஒரு உணவு பிடிக்காமல் போனால் அதில் உள்ள சத்துக்களை விளக்கி சொல்லுங்கள். அப்படியும் அதனை அவர்கள் விரும்பாவிட்டால், ஓட்டல்களுக்கு செல்லும்போது அந்த உணவு வகையை சாப்பிட சொல்லுங்கள். ஏனெனில் ஒரே உணவை அங்கு வேறு மாதிரி சமைத்திருப்பார்கள். அங்குள்ள பக்குவத்தின்படி வீட்டில் சமைத்து கொடுத்தால் பின்னர் விரும்பி சாப்பிட ஆரம்பித்துவிடுவார்கள்.
உங்கள் வீட்டு சாப்பாட்டு மேஜை உங்கள் குழந்தைகளுக்கு வாழ்க்கைப்பாடத்தை கற்றுத்தரும் இடம். அதனால் அந்த வகுப் பறையில் பாடம் நடத்தும் நல்ல ஆசிரியராக பெற்றோர்கள் இருக்கவேண்டியது அவசியம்!
உணவை கீழே சிந்தாமல் சாப்பிடுவதும் குழந்தைகளுக்கு தரவேண்டிய சிறந்த பயிற்சி. தேவையான அளவுக்கு மட்டும் உணவு வகைகளை தேர்ந்தெடுத்து எடுத்து வைத்துக்கொண்டு வீணாக்காமல் சாப்பிடுவதற்கு பழக்கப்படுத்தவேண்டும். இது தேவை, பகிர்வு, கவனம் சிதறாத செயல் போன்றவைகளை குழந்தைகளுக்கு கற்றுத்தரும்.
குழந்தை பிறந்த ஆறு மாதத்தில் இருந்து தனது பெற்றோர் எப்படி சாப்பிடுகிறார்கள் என்பதை பார்த்துக்கொண்டே வளரும். அவர்கள் எப்படி சாப்பிடுகிறார்களோ அதே முறையில்தான் குழந்தையும் சாப்பிடத்தொடங்கும். அதனால் குழந்தைகள் பிறந்த பின்பு, முதலில் பெற்றோர் சரியாக சாப்பிடக் கற்றுக்கொள்ளவேண்டும். சாப்பாட்டு மேஜை நாகரிகத்தையும் கடைப்பிடிக்கவேண்டும். அதை பார்த்து குழந்தைகள் பழகவேண்டும்.
குழந்தைகளின் செயல்திறனை ஆராயும் ஆராய்ச்சியாளர்கள் சிலர், அந்த குழந்தைகளை சாப்பாட்டு மேஜையில் அவர் களது இஷ்டத்திற்கு சாப்பிட அனுமதித்தார்கள். அவர்கள் எந்த மாதிரியான உணவுகளை தேர்ந்தெடுத்தார்கள். அதை எப்படி தங்கள் சாப்பாட்டுத்தட்டில் எடுத்துவைத்தார்கள். எப்படி சாப்பிட்டார்கள். அப்போது அருகில் அமர்ந்திருக்கும் குழந்தைகளிடம் எப்படி அணுகினார்கள் என்பதை எல்லாம் கண்காணித்தார்கள்.
அதன் மூலம் அவர்களது செயல்திறனை அளவிட்டார்கள். அவர் களது இயல்பு என்ன? அவர்களிடம் எதிர்காலத்தில் எத்தகைய மாற்றங்கள் தேவைப்படும் என்பதை எல்லாம் கணித்தார்கள். அந்த குழந்தைகளின் மூளை வளர்ச்சி சரியாக இருக்கிறதா என்பதையும் அவர்களது சாப்பாட்டு முறை மூலம் கண்டறிந்துவிட்டார்கள்.
அதே நேரத்தில் அந்த குழந்தைகளின் வீட்டுச்சூழல் எப்படி இருக்கிறது என்பதையும் அவர்களது உணவுப் பழக்கம் மூலம் தெரிந்துகொண்டார்கள். பெற்றோர்கள் அவர்களது குழந்தைகளிடம் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதையும், அவர்கள் சாப்பிடும் முறை மூலம் தெரிந்துகொள்ளலாம் என்றும் சொல்கிறார்கள்.
அந்த ஆராய்ச்சியாளர்கள், “உங்கள் குழந்தைகளுக்கு சிறு பருவத்தில் இருந்தே சாப்பாட்டு மேஜை நாகரிகத்தை கற்றுக்கொடுங்கள். அது அவர்களை சிறந்த பண்புள்ளவர்களாகவும், சமயோசித திறன் கொண்டவர்களாகவும் உருவாக்கும்” என்று பரிந்துரைக்கிறார்கள்.
குழந்தைகளுக்கு எந்த உணவை முதலில் சாப்பிட வேண்டும், எதை கடைசியாக சாப்பிட வேண்டும் என்பதை கற்றுக்கொடுக்க வேண்டும். அதே போல் குழந்தைகளை எல்லாவித உணவுகளையும் சாப்பிட பழக்க வேண்டும். அப்போதுதான் உடலுக்கு தேவையான எல்லா சத்துக்களும் கிடைக்கும். எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுவதால் அவசர அவசரமாக சாப்பிடுவது தவிர்க்கப்படும். உணவை நன்றாக மென்று சாப்பிடவும், தேவையான இடைவெளி விட்டு சாப்பிடவும் கற்றுக்கொண்டால் உணவு எளிதில் செரிமானமாகும். குழந்தைகளுடன் உட்கார்ந்து சாப்பிடும்போது மனதில் மகிழ்ச்சி ஏற்படும். அதன் மூலம் நெருக்கமான உறவு பேணப் படும்.
சாப்பிடும்போது நல்ல விஷயங்களை பேச வேண்டும். திகிலான விஷயங்களையும், பிரச்சினைக்குரிய விஷயங்களையும் பற்றி பேசக்கூடாது. பயந்த சுபாவத்துடன் அமர்ந்து சாப்பிடக் கூடாது. தொலைக்காட்சியில் சண்டை, சச்சரவுக்குரிய காட்சிகளை பார்த்தபடி சாப்பிடுவது பலருக்கும் பழக்கமாகிவிட்டது. அது நல்ல பழக்கமல்ல. தொலைக்காட்சி மீதே முழு கவனத்தையும் பதிக்கும்போது, சாப்பிடும் உணவின் ருசி கூட தெரியாமல், இவ்வளவு நேரம் என்ன சாப்பிட்டோம் என்பது கூட புரியாமல் சாப்பிட்டு விடுவார்கள்.
சாப்பிடும் உணவுப் பொருட் களின் தன்மையை உணர்ந்து சாப்பிட வேண்டும். ‘இது நம் உடலுக்கு குளிர்ச்சி தரும், இது புரத சத்து நிறைந்தது’ என்பதை உணர்ந்து சாப்பிடும்போது அந்த விஷயம் நம் புற மனதில் பதிவாகி பின் ஆழ் மனதில் பதிவாகி, தனக்கு எது தேவை? எது தேவையில்லை என்ற தெளிவை உருவாக்கி விடும். இதன் மூலம் தனது உடலுக்கு பொருந்தக்கூடிய உணவை தேர்ந்தெடுக்க குழந்தைகள் பக்குவப்பட்டுவிடுவார்கள்.
எல்லா உணவுகளிலும் பல்வேறுவிதமான சத்துக்கள் இருக்கின்றன. அதை குழந்தைகளுக்கு ஒவ்வொரு முறை சாப்பிடும்போதும் சொல்ல வேண்டும். அதன் மூலம் குழந்தைகள் சத்துக்களை உணர்ந்து, ஆரோக்கியமிக்கவர்களாக மாறுவார்கள்.
பகிர்ந்து உண்ணும் பழக்கம் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும்போதுதான் உருவாகும். ‘டேபிள் மேனர்ஸ்’ என்பதும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடும்போதுதான் பழக்கத்திற்கு வரும்.
எந்த ஒரு நல்ல பழக்கமும் தானாக வந்து விடாது. எல்லாமுமே வழக்கத்தில் வருவதுதான். திருவிழாக்கள், கொண்டாட்டங்கள், பண்டிகைகள் எல்லாம் இப்படி ஒற்றுமையாக அமர்ந்து பகிர்ந்து சாப்பிடும் வழக்கத்தை ஏற்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்டவை. நாளடைவில் அந்த வழக்கம் சுருங்கி போய்விட்டது. அதிலும் நகர வாழ்க்கையில் அதற்கெல்லாம் நேரமில்லாமல் போய்விட்டது.
ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவது நம் நாட்டு வழக்கம் மட்டுமல்ல. மேலை நாடுகளிலும் இதுபோன்ற வழக்கம் உள்ளது. குடும்பத்தில் உள்ளவர்களது அன்பை பகிர்ந்து கொள்ள இது சிறந்த வழி.
ஆப்பிரிக்க நாடுகளில் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் எல்லோரும் ஒன்றுகூடி சாப்பிடுவதற்கென்றே அடிக்கடி சமூக நிகழ்ச்சிகளை நடத்துவார்கள். ஊர் மக்கள் ஒன்று கூடி மொத்தமாக சமைத்து எல்லோரும் பகிர்ந்து உண்பார்கள். அப்போது மேள தாளத்துடன் பாரம்பரிய நடனங்களும் நடக்கும். உணவுடன் சேர்ந்து மகிழ்ச்சியும் பரிமாறப்படும். ஆதிவாசிகள் இன்றும் இந்த வழக்கத்தை தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறார்கள்.
ஆராய்ச்சியாளர்கள் இதுபற்றி பல உண்மைகளை ஆய்வு செய்து வெளியிட்டிருக்கிறார்கள். மகிழ்ச்சி உணவை எளிதாக செரிக்கச் செய்கிறது. உடல் அந்த உணவை விரைவாக ஏற்றுக்கொள் கிறது.
இந்த ஆய்வு இரண்டு பூனைகளிடம் மேற்கொள்ளப்பட்டது. ஒரு பூனையை கூட்டத்தோடு சேர்த்து உணவெடுத்துக்கொள்ளச்செய்தார்கள். இன்னொன்றை தனிமைப்படுத்தி உணவு வழங்கினார்கள். தனியாக சாப்பிட்ட பூனையிடம் பயமும், தயக்கமும், மிரட்சியும் காணப்பட்டது. அது உட்கொண்ட உணவு சரியாக செரிமானமாகவில்லை. ஆனால் கூட்டத்தோடு சாப்பிட்ட பூனையிடம் மகிழ்ச்சியும், ஆரோக்கியமும் நிறைந்திருந்தது. அது எந்த தயக்கமுமின்றி இயல்பாக எல்லோரிடமும் பழகியது. இந்த ஆய்வு கூட்டத்தோடு சேர்ந்து சாப்பிடுவதால் கிடைக்கும் பலன் பற்றி வெளிஉலகுக்கு தெரியப் படுத்தியது.
நாம் சாப்பிடும் உணவு அத்தனையும் உடனடி சக்தியாக மாறி உடலுக்கு கிடைத்துவிடுவதில்லை. அதனால் சாப்பிட்டதும் நம் கடமை முடிந்துவிட்டது என்று நினைத்துவிடக்கூடாது. சாப்பிட்ட உணவு சக்தியாக மாறவேண்டும் என்றால், அதை எப்படி, யாருடன் சேர்ந்து சாப்பிடுகிறோம் என்பது முக்கியம். அதனால்தான் ஐந்தறிவுள்ள ஜீவன்கள் கூட உணவை தன் இனத்துடன் பகிர்ந்து உண்ணவே விரும்புகிறது.
நம் முன்னோர்களும் விழாக்கள், விசேஷங்கள் வழியாக தங்கள் வாழ்வியலில் பகிர்ந்து உண்ணும் பழக்கத்தை பலவழிகளில் பின்பற்றி வந்தார்கள். அதனை பின்பற்ற பலரும் முயற்சி செய்து வருகிறார்கள். ஆனால் நேரம் அதற்கு இடம் தருவதில்லை. வாழ்க்கை முறையும் மாறிவிட்டது. இருந்தபோதிலும் வாரத்தின் விடுமுறை நாட்களில் மட்டுமாவது இந்த பழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும்.
சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகள் கூட மற்றவர்கள் சாப்பிடுவதை பார்த்து தானும் அதுபோல் சாப்பிட விரும்புவார்கள். பள்ளியில் அன்றைய தினம் சந்தித்த தன் அனுபவங்களை பரிமாறிக் கொள்ளவும் ஆசைப்படுவார்கள். அவர்களுடன் அமர்ந்து சாப்பிடும்போது, அவர்களுக்கு பிடித்த உணவு எது என்பதை கண்டறியவும் வசதியாக இருக்கும்.
அவர்களுக்கு ஏதேனும் ஒரு உணவு பிடிக்காமல் போனால் அதில் உள்ள சத்துக்களை விளக்கி சொல்லுங்கள். அப்படியும் அதனை அவர்கள் விரும்பாவிட்டால், ஓட்டல்களுக்கு செல்லும்போது அந்த உணவு வகையை சாப்பிட சொல்லுங்கள். ஏனெனில் ஒரே உணவை அங்கு வேறு மாதிரி சமைத்திருப்பார்கள். அங்குள்ள பக்குவத்தின்படி வீட்டில் சமைத்து கொடுத்தால் பின்னர் விரும்பி சாப்பிட ஆரம்பித்துவிடுவார்கள்.
உங்கள் வீட்டு சாப்பாட்டு மேஜை உங்கள் குழந்தைகளுக்கு வாழ்க்கைப்பாடத்தை கற்றுத்தரும் இடம். அதனால் அந்த வகுப் பறையில் பாடம் நடத்தும் நல்ல ஆசிரியராக பெற்றோர்கள் இருக்கவேண்டியது அவசியம்!