கால்பந்து

பந்தை தடுக்கும் இரு அணி வீரர்கள்

உலக கோப்பை கால்பந்து - செர்பியா, கேமரூன் இடையிலான ஆட்டம் சமனில் முடிந்தது

Published On 2022-11-28 12:03 GMT   |   Update On 2022-11-28 12:03 GMT
  • முதல் பாதியில் செர்பியா அணி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
  • 2வது பாதியில் அதிரடியாக ஆடிய கேமரூன் இரு கோல் அடித்து சமன் செய்தது.

தோகா:

கத்தாரில் 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இன்று நடைபெற்ற குரூப் ஜி பிரிவு லீக் ஆட்டத்தில் செர்பியா, கேமரூன் அணிகள் மோதின.

போட்டியின் 29வது நிமிடத்தில் கேமரூன் வீரர் காஸ்டெலொடோ ஒரு கோல் அடித்தார். முதல் பாதியின் முடிவில் கூடுதலாக அளிக்கப்பட்ட நேரத்தில் செர்பியா இரு கோல்கள் அடித்து அசத்தியது. 46-வது நிமிடத்தில் பாவ்லோவிக் ஒரு கோலும், 48வது நிமிடத்தில் சாவிக் ஒரு கோலும் அடித்தனர். இதனால் முதல் பாதி முடிவில் செர்பியா 2-1 என முன்னிலை வகித்தது.

இரண்டாவது பாதியின் 53-வது நிமிடத்தில் செர்பியாவின் அலெக்சாண்டர் மிட்ரோவிக் ஒரு கோல் அடித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கேமரூன் வின்செண்ட் அபுபக்கர் 63 வது நிமிடத்திலும், எரிக் மாக்சிம் 66வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்து அசத்தினர்.

ஆட்டநேர இறுதியில், இரு அணிகளும் 3-3 என்ற கோல் கணக்கில் சமனிலை வகித்தன. இதன்மூலம் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது.

Tags:    

Similar News