கால்பந்து

கோல் அடித்த மகிழ்ச்சியில் குரோசியா வீரர்

பெனால்டி ஷூட் அவுட் முறையில் 3-1 என ஜப்பானை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது குரோசியா

Published On 2022-12-05 17:53 GMT   |   Update On 2022-12-05 17:53 GMT
  • முதல் பாதியில் ஜப்பான் அணி ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றது.
  • இரண்டாம் பாதியில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமனிலை வகித்தன.

தோகா:

கத்தாரில் உலக கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. இரவு 8.30 மணிக்கு நடந்த நாக் அவுட் சுற்றில் ஜப்பான், குரோசியா அணிகள் மோதின.

தொடக்கத்தில் ஜப்பான் வீரர்கள் சிறப்பாக ஆடினர். ஆட்டத்தின் 43-வது நிமிடத்தில் ஜப்பான் அணியின் டெய்சன் மேடா ஒரு கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார். இதனால் முதல் பாதியில் ஜப்பான் அணி 1-0 என முன்னிலை வகித்தது.

இரண்டாவது பாதியின் 55-வது நிமிடத்தில் குரோசியாவின் இவான் பெரிசிக் ஒரு கோல் அடித்தார். இதனால் 1-1 என சமனிலை வகித்தன.

கூடுதலாக 10 நிமிடங்கள் என 3 முறை அளிக்கப்பட்டன. அப்போதும் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதையடுத்து பெனால்டி ஷூட் அவுட் முறை கொண்டு வரப்பட்டது.

இறுதியில், குரோசியா அணி 3-1 என்ற கணக்கில் ஜப்பானை போராடி வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.

Tags:    

Similar News