தலையங்கம்

மின்சாரம் தாக்கி முதியவர் பலி

Published On 2023-01-23 05:53 GMT   |   Update On 2023-01-23 05:53 GMT
  • பனை ஓலை ெவட்டியபோது சம்பவம்
  • மின்சாரம் தாக்கி முதியவர் பலியானார்

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே வெள்ளைச்செட்டிவயல் கிராமத்தை சேர்ந்தவர் ராமன் (வயது 70). விவசாயக் கூலித் தொழிலாளியான இவர், பனை ஓலை மூலம் கூடை, பாய் உள்ளிட்டவைகளை பின்னி விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டருகே வயல்காட்டில் உள்ள பனைமரத்தில் ஏறி ஓலை வெட்டியுள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக பனைமரத்தின் அருகே சென்று கொண்டிருந்த உயர் மின்னழுத்த மின்கம்பியிலிருந்து இவர் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தகவலறிந்து விரைந்து வந்த ஆவுடையார்கோவில் போலீசார் ராமனின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

Similar News