வழிபாடு

வாரம் ஒரு தேவாரம்

Published On 2025-07-09 08:42 IST   |   Update On 2025-07-09 08:42:00 IST
  • சிவபெருமான் மீது பாடப்பெற்ற பன்னிரு திருமுறைகளில், முதல் 7 திருமுறைகளை 'தேவாரம்' என்று அழைக்கிறோம்.
  • ஏழாம் திருமுறையை சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடியிருக்கிறார்கள்.

சிவபெருமான் மீது பாடப்பெற்ற பன்னிரு திருமுறைகளில், முதல் 7 திருமுறைகளை 'தேவாரம்' என்று அழைக்கிறோம். இதில் முதல் மூன்று திருமுறைகளை திருஞானசம்பந்தரும், நான்காம் திருமுறை முதல் ஆறாம் திருமுறை வரையான பாடல்களை திருநாவுக்கரசரும், ஏழாம் திருமுறையை சுந்தரமூர்த்தி சுவாமிகளும் பாடியிருக்கிறார்கள்.

தெய்வத்தின் மீது பாடப்பட்ட ஆரம் (பாமாலை) என்பதால் இது 'தேவாரம்' என்று பெயர் பெற்றதாகவும் கூறுவர். இந்த தேவாரப் பாடலில் இருந்து ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்க்கலாம்.

பாடல்:-

தோலொடு நூலிழை சேர்ந்த மார்பர் தொகுமறை யோர்கள் வளர்த்த செந்தீ மால்புகை போய்விம்மு மாடவீதி

மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்

சேல்புல்கு தண்வயல் சோலைசூழ்ந்த

சீர்கெள்செங் காட்டங் குடியதனுள்

கால்புல்கு பைங்கழல் ஆர்க்க ஆடும்

கணபதி ஈச்சரம் காமுறவே.

-திருஞானசம்பந்தர்

விளக்கம்:-

வேதங்கள் உணர்ந்த அந்தணர்கள் எழுப்பும் வேள்வி தீயின் புகை வெளிப்படும் மாடங்களுடன் கூடிய வீதிகளை உடையது திருமருகல் திருத்தலம். இங்கு மான் தோலும், பூணூலும் மார்பில் அணிந்து வீற்றிருக்கும் இறைவனே, மீன்கள் நிறைந்த நீர்வளம் மிக்க வயல்களும், சோலைகளும் சூழ்ந்த செங்காட்டங்குடியில் திருவடி கழல்கள் ஒலிக்க ஆடும் திருநடனத்தை, கணபதி ஈச்சரத்தில் செய்ததற்கு என்ன காரணமோ? சொல்வாயாக!

Tags:    

Similar News