வழிபாடு

ஆரணி ஸ்ரீ ஆதிலட்சுமி சமேத ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு

Published On 2023-01-02 02:10 GMT   |   Update On 2023-01-02 02:10 GMT
  • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
  • பக்தர்கள் அனைவருக்கும் தீர்த்தம், பிரசாதம் வழங்கப்பட்டது.

ஆரணி பஸ் நிறுத்தம் அருகே பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஆதிலட்சுமி சமேத ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் திருக்கோவில் உள்ளது.

இக்கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று அதிகாலை சொர்க்கவாசல் எனப்படும் பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதை முன்னிட்டு நேற்று பெருமாள் அலங்கார ஸ்தாபன திருமஞ்சனம் எனப்படும் மகா அபிஷேக நிகழ்ச்சி நடைபெற்றது.

இன்று அதிகாலை 5 மணிக்கு சொர்க்கவாசல் எனப்படும் பரமபத வாசல் திறக்கப்பட்டு எம்பெருமான் அதன் வழியாக வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், ஆரணி சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

இதன் பின்னர், பக்தர்கள் அனைவருக்கும் தீர்த்தம், பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News