வழிபாடு

இன்றைய ராசிபலன்: 13.07.2025

Published On 2025-07-13 05:46 IST   |   Update On 2025-07-13 05:46:00 IST
  • இன்றைய ராசிபலன்
  • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

மேஷம்

அதிகாலையிலேயே அனுகூலமான தகவல் வந்து சேரும் நாள். தொழில் வளர்ச்சி கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள்.

ரிஷபம்

சிக்கல்கள் விலகி சிகரத்தைத் தொடும் நாள். சாமர்த்தியமாகப் பேசி காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகளை ஏற்கும் சூழ்நிலை உண்டு.

மிதுனம்

வாக்குவாதங்களைத் தவிர்த்து வளம் காண வேண்டிய நாள். வளர்ச்சியில் தளர்ச்சி ஏற்படும். வரவைக் காட்டி லும் செலவு கூடும். ஆரோக்கியத்திற்காக செலவு செய்வீர்கள்.

கடகம்

யோகமான நாள். எடுத்த முயற்சியில் வெற்றி கிட்டும். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும். நண்பர்கள் நல்ல தகவலைத் தருவர். புதுமனை கட்டிக் குடியேறும் எண்ணம் மேலோங்கும்.

சிம்மம்

பெரிய மனிதர்களின் சந்திப்பால் பிரச்சனைகள் தீரும் நாள். எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி பலன் தரும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். தொழில் வளர்ச்சி உண்டு.

கன்னி

அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். வழக்குகள் சாதகமாகும். வருமானம் திருப்தி தரும். உத்தியோகத்தில் பிறரின் விமர்சனங்களைத் தாண்டி முன்னேற்றம் காண்பீர்கள்.

துலாம்

உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைத்து மகிழும் நாள். ஆரோக்கியம் சீராக மாற்று மருத்துவத்தை மேற்கொள்வீர்கள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு.

விருச்சிகம்

மகிழ்ச்சி கூடும் நாள். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். உடன்பிறப்புகள் வழியில் நன்மை உண்டு. உத்தியோகத்தில் உங்கள் செயல்பாடு மற்றவர்களின் மனதை வாட்டும்.

தனுசு

புதிய பாதை புலப்படும் நாள். பொருளாதார நலன் கருதி முக்கியப் புள்ளிகளைச் சந்திப்பீர்கள். சுற்றியிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. விரயங்கள் அதிகரிக்கும்.

மகரம்

வரவு திருப்தி தரும் நாள். தொழில் முன்னேற்றம் உண்டு. அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் கிடைக்கும். உத்தியோகத்தில் இழந்த பதவியை மீண்டும் பெறும் வாய்ப்பு உண்டு.

கும்பம்

பணத்தேவைகள் உட னுக்குடன் பூர்த்தியாகும் நாள். நிச்சயித்த காரியம் நிச்சயித்த படி நடைபெறும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகளும், பதவிகளும் உங்களைத் தேடி வரும்.

மீனம்

மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள் அகலும். முன்னோர் சொத்துகளில் முறையான பங்கீடு உண்டு. அதிகாரப் பதவியில் உள்ளவர்களால் நன்மை உண்டு.

Tags:    

Similar News