வழிபாடு

இன்றைய ராசிபலன்: 12.07.2025

Published On 2025-07-12 05:31 IST   |   Update On 2025-07-12 05:31:00 IST
  • இன்றைய ராசிபலன்
  • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

மேஷம்

குழப்பங்கள் அகலும் நாள். கூடுதல் வருமானம் உண்டு. குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும். உத்தியோகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு பற்றிய நல்ல தகவல் வரலாம்.

ரிஷபம்

பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணையும் நாள். கனிவாகப்பேசி காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். வருமானம் திருப்தி தரும். கல்யாணக் கனவுகள் நனவாகும்.

மிதுனம்

மனக்கலக்கம் ஏற்படும் நாள். வரவைக் காட்டிலும் செலவு கூடும். வாகனம் பழுதுகளால் வாட்டம் காண்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கண்டிப்புக்கு ஆளாக நேரிடும்.

கடகம்

இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும் நாள். பிள்ளைகள் வழியில் வருமானங்கள் உண்டு. இடம், பூமி வாங்கும் யோகம் ஏற்படும். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும்.

சிம்மம்

ஆதாயம் தரும் தகவல் அலைபேசி வழியில் வரும் நாள். வசதியான வாழ்விற்கு அடித்தளம் அமைத்துக் கொள்வீர்கள். வருங்கால நலன் கருதி சேமிக்கத் தொடங்குவீர்கள்.

கன்னி

சேமிப்பு உயரும் நாள். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். எதையும் உடனடியாக செய்து முடிப்பீர்கள். வீடு, மனை வாங்கப் போட்ட திட்டங்கள் நிறைவேறும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள்.

துலாம்

வாங்கிய கடனைக் கொடுத்து மகிழும் நாள். நல்லவர்களின் தொடர்பால் நலம் காண்பீர்கள். பொதுவாழ்வில் புகழ் கூடும். லாப நோக்கத்தோடு பழகியவர்களை இனம் கண்டு கொள்வீர்கள்.

விருச்சிகம்

பணவரவு திருப்தி தரும் நாள். தொட்ட காரியங்களில் வெற்றி கிட்டும். வாகனம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வு வருவதற்கான அறிகுறிகள் தென்படும்.

தனுசு

செல்வாக்கு அதிகரிக்கும் நாள். திடீர் பயணம் திகைக்க வைக்கும். சொத்துகளால் ஏற்பட்ட பிரச்சனைகள் அகலும். மாலை நேரம் மனம் இனிக்கும் செய்திகள் வந்து சேரலாம்.

மகரம்

தீட்டிய திட்டம் வெற்றி பெறும் நாள். திறமை பளிச்சிடும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். தொழிலை விரிவுபடுத்தலாமா என்ற சிந்தனை மேலோங்கும்.

கும்பம்

நட்பு வட்டம் விரிவடை யும் நாள். தொல்லை தந்த எதிரிகள் விலகுவர். எடுத்தோம், முடித்தோம் என்று எந்தச் செயலையும் செய்து முடிப்பீர்கள். அரசியல்வாதிகளின் ஆதரவு உண்டு.

மீனம்

இடமாற்றத்தால் இனிமை ஏற்படும் நாள். தொழில் கூட்டாளிகளிடம் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. உறவினர் பகையால் உள்ளம் கவலை கொள்ளும். எதிர்பாராத செலவு உண்டு.

Tags:    

Similar News