வழிபாடு

இன்றைய ராசிபலன்: 11.07.2025

Published On 2025-07-11 06:10 IST   |   Update On 2025-07-11 06:10:00 IST
  • இன்றைய ராசிபலன்
  • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

மேஷம்

சச்சரவு நீங்கி சமாதானக் கொடி பறக்கும் நாள். தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.

ரிஷபம்

தகராறுகள் தானாக வந்து சேரும் நாள். தன விரயம் உண்டு. விழிப்புணர்ச்சியுடன் செயல்படுவது நல்லது. உறவினர் பகை உருவாகும். ஊர் மாற்ற சிந்தனை மேலோங்கும்.

மிதுனம்

யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். தொழில் போட்டிகள் அதிகரிக்கும். வாகன பழுதுகளால் வாட்டம் ஏற்படும். நண்பர்களிடம் ஒப்படைத்த பொறுப்புகள் நடைபெறாமல் போகலாம்.

கடகம்

வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைக்கும் நாள். நேற்றைய மனக்கசப்புகள் இன்று மாறும். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகள் வந்து சேரும். வீடு மாற்ற சிந்தனைகள் மேலோங்கும்.

சிம்மம்

உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டும் நாள். நேற்று பாதியில் நின்ற பணியை இன்று மீதியும் தொடருவீர்கள். மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும்.

கன்னி

வி.ஐ.பி.க்களின் ஒத்துழைப்பு கிடைத்து மகிழும் நாள். விரும்பிய காரியமொன்றை செய்து முடிப்பீர்கள். உடனிருப்பவர்களால் ஏற்பட்ட தொல்லை அகலும். வருமானம் திருப்தி தரும்.

துலாம்

பொழுது விடியும்பொழுதே பொன்னான தகவல் வந்து சேரும் நாள். கூட்டாளிகள் கூடுதல் லாபத்தைக் கொண்டுவந்து சேர்ப்பர். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள்.

விருச்சிகம்

பாராட்டும் புகழும் கூடும் நாள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். பயணங்களால் எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.

தனுசு

புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழும் நாள். போன் மூலம் பொன்னான தகவல் வந்து சேரும். சுப விரயம் உண்டு. குடியிருக்கும் வீட்டால் ஏற்பட்ட பிரச்சனைகள் அகலும்.

மகரம்

தொல்லை தந்தவர்கள் எல்லையை விட்டு விலகும் நாள். உறவினர்களின் ஒத்துழைப்போடு ஒரு நல்ல காரியத்தைச் செய்து முடிப்பீர்கள். உடனிருப்பவர்களுக்காக செலவிடுவீர்கள்.

கும்பம்

யோகமான நாள். உத்தியோகத்தில் பதவி உயர்வு வருவதற்கான அறிகுறிகள் தென்படும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தந்தை வழியில் ஆதரவு உண்டு.

மீனம்

சோகங்கள் மாறி சுகங்கள் கூடும் நாள். சுணங்கிய காரியம் சுறுசுறுப்பாக நடைபெறும். தூரத்து உறவினர்கள் தொழிலுக்கு உறுதுணையாக இருப்பர். வரன்கள் வாயில் தேடி வரும்.

Tags:    

Similar News