வழிபாடு

பிரம்மோற்சவ விழா 5-வதுநாள்: மோகினி அலங்காரத்தில் கோவிந்தராஜ சாமி வீதி உலா

Published On 2023-05-31 05:36 GMT   |   Update On 2023-05-31 05:36 GMT
  • திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலின் பிரமோற்ச விழா நடைபெற்று வருகிறது.
  • சுவாமி, தாயாருக்கு திருமஞ்சனம் நடந்தது.

திருப்பதி கோவிந்தராஜ சாமி கோவிலின் பிரமோற்ச விழா நடைபெற்று வருகிறது. விழாவின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் சாமி வீதி உலா நடைபெறுகிறது.

விழாவின் 5-வது நாளான நேற்று காலை மோகினி அலங்காரத்தில் காட்சியளித்தார். மங்கள வாத்தியங்கள் முழங்க, பஜனை, கோலாட்டங்களுடன் கோவில் மாட வீதிகளில் வாகனசேவை நடைபெற்றது. பின்னர் சுவாமி, தாயாருக்கு திருமஞ்சனம் நடந்தது. பால், தயிர், தேன், சந்தனம், மஞ்சள், இளநீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது.

இரவு 7 மணி முதல் 9.30 மணி வரை கருடவாகனத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

Tags:    

Similar News