வழிபாடு

அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது

Published On 2022-07-23 07:30 GMT   |   Update On 2022-07-23 07:30 GMT
  • பராசக்தி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
  • 10-ம் நாளன்று பராசக்தி அம்மனுக்கு வளைகாப்பு உற்சவம் நடக்கிறது.

திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவிலில் ஆடிப்பூரம் பிறம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் இன்று காலை தொடங்கியது.

விழாவை முன்னிட்டு விநாயகர், பராசக்தி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். தொடர்ந்து அம்மன் சன்னதியில் உள்ள தங்க கொடிமரத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது.

விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து 10 நாட்களுக்கு தினமும் காலையும் மாலையும் விநாயகர் பராசக்தி அம்மன் கோவிலின் மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி தருவார்கள்.

10-ம் நாளன்று பராசக்தி அம்மனுக்கு வளைகாப்பு உற்சவமும், அன்று இரவு உண்ணாமுலை அம்மன் சன்னதி முன்பு தீமிதி திருவிழாவும் நடைபெற உள்ளன.

Tags:    

Similar News