வழிபாடு

திருவள்ளூர் அருகே நரசிம்மர் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Published On 2022-06-22 06:49 GMT   |   Update On 2022-06-22 06:49 GMT
  • 24-ந்தேதி கருட சேவை நடக்கிறது
  • 28-ந்தேதி தேர் திருவிழாவும், 30-ந்தேதி தீர்த்தவாரியும் நடைபெறுகிறது.

திருவள்ளூர் அடுத்த நரசிங்கபுரம் கிராமத்தில் லட்சுமி நரசிம்மர் பெருமாள் கோவில் உள்ளது.

நரசிம்மரின் ஒன்பது வடிவங்களில் ஒன்றான மாலோவ நரசிம்மன் என்று அழைக்கப்படும் தேவியுடன் கூடிய திருமாலின் வடிவத்தில் இங்கு வீற்றிருக்கிறார்.

திருமாலின் ஐந்து வகையான பிரதிஷ்டைகளில் ஒன்றான அஸ்தாபன பிரதிஷ்டை அதாவது அமர்ந்த கோலத்தில் சிரித்த முகத்துடன் சாந்த சொரூபமாக ஏழரை அடி உயரத்தில் காட்சியளிக்கிறார். அவர் தாயார் லட்சுமி தேவியை தொடை மீது அமர்த்தி ஒருவருக்கொருவர் அணைத்த படி கம்பீரமாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இங்கு சிரித்த முகத்துடன் நரசிம்மர் இருக்க தாயாரின் பார்வை முழுவதும் பக்தர்களை பார்ப்பதாக இருப்பது தனி சிறப்பு. இக்கோவிலில் ஆனி மாத பிரம்மோற்சவ விழா, இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவையொட்டி இன்று முதல் ஜூலை 1-ந்தேதி வரை தினசரி உற்சவர் காலை, மாலையில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சி தருகிறார். 3-ம் நாள் 24-ந்தேதி கருட சேவை நடக்கிறது. 28-ந்தேதி தேர் திருவிழாவும், 30-ந்தேதி தீர்த்தவாரியும் நடைபெறுகிறது.

பிரம்மோற்சவ விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News