வழிபாடு

திருமழிசை ஜெகந்நாத பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா தொடக்கம்

Published On 2023-06-27 13:57 IST   |   Update On 2023-06-27 13:57:00 IST
  • 29-ந்தேதி கருட சேவை நடக்கிறது.
  • 3-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.

பூந்தமல்லி அடுத்த திருமழிசையில் உள்ள ஜெகந்நாத பெருமாள் கோவில் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலில் ஆனி மாத பிரம்மோற்சவ திருவிழா விமரிசையாக நடைபெறும்.

இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து மாலை சுவாமி தங்க தோளுக்கினியன் வாகனத்தில் திருவீதி புறப்பாடும் நடைபெறுகிறது.

விழாவையொட்டி தினமும் காலை, மாலையில் பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நடக்கிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கருட சேவை வருகிற 29-ந்தேதி காலையிலும், அடுத்த மாதம் (ஜூலை) 3-ந்தேதி தேரோட்டமும் நடைபெற உள்ளது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜூலை 5-ந் தேதி காலை தீர்த்தவாரி நடைபெற்று மாலையில் கொடியிறக்கத்துடன் திரு விழா நிறைவு பெறுகிறது.

விழாவுக்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News