வழிபாடு

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் தீர்த்தவாரி

Published On 2022-12-24 05:22 GMT   |   Update On 2022-12-24 05:22 GMT
  • இந்த கோவிலில் உள்ள குளங்களில் புனித நீராடினால் பிள்ளை பேறு கிடைக்கும்.
  • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்..

திருவெண்காட்டில் சுவேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள குளங்களில் புனித நீராடினால் பிள்ளை பேறு கிடைக்கும் என புராண வரலாறு கூறுகின்றன. இத்தகைய சிறப்பு பெற்ற கோவிலில் நேற்று அமாவாசையையொட்டி தீர்த்த வாரி நடந்தது.

முன்னதான மேளம், தாளம் முழங்கிட அஸ்திரதேவர் ஊர்வலமாக குளங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு தீர்த்தவாரி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்..

இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி முருகன், கோவில் அர்ச்சகர் திருஞானம் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News