வழிபாடு

சீர்காழி சட்டைநாதர் கோவில் குடமுழுக்கு விழா மே 24-ந்தேதி நடக்கிறது

Published On 2023-01-14 08:48 GMT   |   Update On 2023-01-14 08:48 GMT
  • காசிக்கு அடுத்தப்படியாக அஷ்ட பைரவருக்கு தனி சன்னதி இங்குதான் உள்ளது
  • கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் சட்டைநாதர் கோவில் உள்ளது.

தேவாரப் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் 14-வது தலமாக விளங்குகிறது. இக்கோவிலில் பிரம்ம தீர்த்தம் உள்ளிட்ட 22 தீர்த்தங்கள்

அமைந்துள்ளன. இந்த தலத்தில் சாமி பிரம்மபுரீஸ்வரர், தோனியப்பர், சட்டைநாதர் என மூன்று நிலைகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு

அருள்பாலிக்கிறார். மேலும் காசிக்கு அடுத்தப்படியாக அஷ்ட பைரவருக்கு தனி சன்னதி இங்குதான் உள்ளது என்பது சிறப்பு

அம்சமாகும். பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த கோவிலில் குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று

வருகின்றன.

இந்த நிலையில் நேற்று கோவிலுக்கு வந்த தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியா சுவாமிகள் தரிசனம்

செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சீர்காழியில் சட்டை நாதர் கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் முடிவடைந்து வருகிற மே மாதம் 24-ந்தேதி

குடமுழுக்கு விழா நடக்கிறது. முன்னாக 20-ந்தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கப்பட்டு 22-ந் தேதி பரிவார மூர்த்திகளுக்கு

குடமுழுக்கும், 24-ந் தேதி காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் பிரம்மபுரீஸ்வரர் கோவில் குடமுழுக்கும் நடைபெற உள்ளது. இதில்

18 ஆயிரம் பக்கம் 16 தொகுப்புகளாக திருமுறையும், 14 சாஸ்திரங்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வெளியிடப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை தொடர்ந்து சீர்காழி தமிழ்ச் சங்கத்தை ஆதீனம் தொடங்கி வைத்தார். பேட்டியின் போது தருமபுரம் ஆதீன கட்டளை சிவகுருநாத

தம்பிரான் சுவாமிகள், கோவில் நிர்வாகி செந்தில், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் மார்கோனி, இந்து முன்னணி மாவட்ட தலைவர்

சரண்ராஜ், முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் மாரிமுத்து, பாலசுப்பிரமணியன், கோவி நடராஜன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள நந்தவனத்தில் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கான பூச்செடிகளை ஆதீனம் நட்டு வைத்தார்.

Tags:    

Similar News