வழிபாடு

திருப்பதியில் ரூ.300 கட்டணத்தில் 12 லட்சம் தரிசன டிக்கெட்டுகள் இன்று வெளியிடப்பட்டது

Published On 2023-01-09 04:33 GMT   |   Update On 2023-01-09 04:33 GMT
  • 2-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை 20 நாட்களுக்கான 5 லட்சம் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டன.
  • பிப்ரவரி மாதத்திற்கு 7 லட்சம் தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டது.

திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் ரூ.300 கட்டண ஆன்லைன் தரிசன டிக்கெட் இன்று காலை 9 மணிக்கு வெளியிடப்பட்டது.

தினமும் 25 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் வரும் 12-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை 20 நாட்களுக்கான 5 லட்சம் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டன.

பிப்ரவரி மாதத்திற்கு 28 நாட்களுக்கான 7 லட்சம் தரிசன டிக்கெட்டுகள் என மொத்தம் 12 லட்சம் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டது.

நாளை காலை பிப்ரவரி 28-ந்தேதி வரைக்கான தங்கும் அறை வாடகை முன்பதிவு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.

பக்தர்கள் அறை வாடகையை முன்பதிவு செய்து கொள்ள வேண்டுமென தெரிவிக்கப்பட்டு உள்ளது.

திருப்பதியில் நேற்று 67,169 பேர் தரிசனம் செய்தனர். 21,222 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.86 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

Tags:    

Similar News