வழிபாடு

கூடங்குளம் புனித அன்னம்மாள் ஆலய திருவிழா கொடியேற்றம்

Published On 2023-07-09 05:42 GMT   |   Update On 2023-07-09 05:42 GMT
  • விழா தொடர்ந்து 10 நாட்கள் நடக்கிறது.
  • விழா நாட்களில் தினமும் சிறப்பு பிரார்த்தனைகள் நடக்கிறது.

கூடங்குளம் புனித அன்னம்மாள் ஆலய திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழானை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனை, ஆடம்பர கூட்டு திருப்பலி நடந்தது. அதனை தொடர்ந்து மாலையில் கொடியேற்றம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

விழா தொடர்ந்து 10 நாட்கள் நடக்கிறது. விழா நாட்களில் தினமும் சிறப்பு பிரார்த்தனைகள், கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. சிறப்பு அழைப்பாளராக பங்கு தந்தைகள் தேவராஜன், ஜெகதீஷ், அன்பு செல்வன், மணி, வசந்தன், ராபின், கிளட்ச்சின், சூசை மணி மற்றும் புனித அன்னம்மாள் ஆலயத்தினர், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கூடங்குளம் பங்குத்தந்தை அந்தோணி ஜெபஸ்டின் ரூபன் செய்திருந்தார்.

Tags:    

Similar News