வழிபாடு

வெள்ளூர் சிவகாமி அம்பாள் உடனுறை மத்தியபதி ஈஸ்வரர் நடுநக்கர் கோவில் வருசாபிஷேக விழா

Published On 2022-07-13 08:15 GMT   |   Update On 2022-07-13 08:15 GMT
  • இந்நிகழ்ச்சியில் வெள்ளூர் ஊர் பொதுமக்கள் சீர்வரிசை உடன் வந்து சாமி தரிசனம் செய்தனர்.
  • இதனை தொடர்ந்து அம்பாள் - சுவாமி விதி உலா நடைபெற்றது.

ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வெள்ளூர் சிவகாமி அம்பாள் உடனுறை மத்தியபதி ஈஸ்வரர் நடுநக்கர் கோவில் வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு நேற்று காலை மணி 9.30 மணிக்கு கோபுர கலசங்களுக்கு கும்பாபிஷேகமும், காலை மணி 11.45 மணிக்கு கணபதி, முருகன், அம்பாள் சுவாமிக்கு கும்பாபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது.

மதியம் 12 மணி அளவில் ஊர் பொதுமக்களுக்கு அன்னதானம் நிகழ்ச்சி நடந்தது. இரவு 7 மணிக்கு சிவபெருமானுக்கும் சிவகாமி அம்மனுக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வெள்ளூர் ஊர் பொதுமக்கள் சீர்வரிசை உடன் வந்து சாமி தரிசனம் செய்தனர்.

இதனை தொடர்ந்து இரவு 8.30 மணிக்கு அம்பாள் - சுவாமி விதி உலா நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரத்திலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News