null
யுகாதி பண்டிகையின் முக்கியத்துவம்
- உகாதி அல்லது யுகாதி யுகம் என்ற பொருளை கொண்டது.
- புதிய ஆண்டு தொடக்கத்தை உகாதி குறிக்கிறது.
இந்து மத நூல்கள் மற்றும் புராணங்களின் படி பிரம்மா இவ்வுலகை படைக்க தொடங்கிய நாளை உகாதி குறிக்கிறது. பிரம்மா காலத்தை வரையறுக்க வருடங்கள், வாரங்கள், நாட்கள் மற்றும் மாதங்களை உருவாக்கி பிரபஞ்ச செயல்பாட்டின் அடையாளமான உகாதியை தொடங்கியதாக நம்பப்படுகிறது. உகாதி அல்லது யுகாதி யுகம் என்ற பொருளை கொண்டது. ஆதி என்றால் புதியது என்று பொருள்படும்.
12 ஆம் நூற்றாண்டில் இந்தியக் கணிதவியலாளர் பாஸ்கராச்சாரியார் யுகாதியை புத்தாண்டின் தொடக்கமாக கண்டறிந்தார். கடுமையான குளிர்காலத்திற்குப் பிறகு வசந்த காலம் அதாவது புதிய ஆண்டு தொடக்கத்தை யுகாதி குறிக்கிறது.
யுகாதி, தெலுங்கு பண்டிகையாகும். இது தெலுங்கு புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது. குறிப்பாக ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் யுகாதி மிகவும் உற்சாகத்துடனும் பக்தியுடனும் கொண்டாடப்படுகிறது.
மக்கள் அதிகாலையில் எழுந்து எண்ணெய் தடவி குளிப்பார்கள். இது உடலையும் மனதையும் தூய்மையாக்கி புத்தாண்டுக்கு தயார்படுத்தும் என்று நம்பப்படுகிறது. மக்கள் புதிய ஆடைகளை அணிவார்கள். இது புதிய தொடக்கங்களையும் குறிக்கிறது.
மக்கள் தங்கள் வீடுகளை மா இலைகள் மற்றும் ரங்கோலிகளால் அலங்கரிக்கின்றனர். இந்த நிகழ்விற்காக மக்கள் சிறப்பு உணவுகளை தயார் செய்வார்கள்.
யுகாதியின் சிறப்பு உணவுகள்
பேவு பெல்லா
யுகாதி அன்று, நடைமுறையில் ஒவ்வொரு வீட்டிலும் வேப்ப இலைகள், மாம்பழம், புளி, உப்பு, வெல்லம் மற்றும் மிளகாய் ஆகியவற்றின் கலவையான பேவு பெல்லா தயாரிக்கப்படுகிறது.
பச்சடி
பச்சடி ஆறு சுவைகளையும் கொண்டுள்ளது. யுகாதி பண்டிகையின் போது மக்கள் தங்கள் குடும்பத்துடன் ருசிக்கும் உணவாக இது திகழ்கிறது.