வழிபாடு
திருவள்ளூர் அருகே செல்வ விநாயகர் கோவிலில் 21 ஆயிரம் கொழுக்கட்டை படையல்
- செல்வ விநாயகருக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
- கொழுக்கட்டை கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.
திருவள்ளூர் அடுத்த திருப்பந்தியூர் கிராமத்தில் செல்வவிநாயகர் கோவில் உள்ளது. இந்த விநாயகர் கோவிலில் ஆனி மாதம் சதுர்த்தியின் போது திருப்பந்தியூர் கிராம மக்கள் ஒன்றுகூடி 350 கிலோ அரிசி மாவு, 350 கிலோ வெல்லம், 300 தேங்காய், 2 கிலோ ஏலக்காய் ஆகியவற்றை கொண்டு 21,000 கொழுக்கட்டை தயாரித்தனர்.
இந்த 21 ஆயிரம் கொழுக்கட்டையும் செல்வ விநாயகர் ஆலய மூலவர் மற்றும் உற்சவர் விநாயகருக்கு படைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து செல்வ விநாயகருக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
இதில் திருபந்தியூர் மற்றும் சுற்றுப்புற கிராமத்தைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் கொழுக்கட்டை கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.