வழிபாடு

மேல்தளத்தில் சென்று வேடிக்கை பார்த்த பக்தர்கள்.

ராமேசுவரம் கோவில் மேல்தளத்திற்கு தடையை மீறி செல்லும் பக்தர்கள்: பாதுகாப்பு கேள்விக்குறி

Published On 2022-12-03 06:05 GMT   |   Update On 2022-12-03 06:05 GMT
  • இந்தியாவில் உள்ள மிக முக்கிய புண்ணிய தலமாக விளங்கி வருகிறது.
  • கோவிலின் மேல்தள பகுதிக்கு பக்தர்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாக கருதப்படும் ராமேசுவரம் ராமநாதசாமி கோவில் தமிழகம் மட்டும் அல்லாமல் இந்தியாவில் உள்ள மிக முக்கிய புண்ணிய தலமாக விளங்கி வருகிறது.

பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலுக்குள் செல்போன், கேமரா உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள் கொண்டு செல்ல போலீசாரால் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

கோவிலின் மேல்தள பகுதிக்கு பக்தர்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலின் தெற்கு கோபுர வாசலின் வளாகத்தில் இருந்து கோவிலின் மேல் தளத்திற்கு செல்லும் பாதையில் தடுப்பு கம்பிகள் மற்றும் கதவுகள் எதுவும் இல்லாததால் கோவிலுக்கு வந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் அய்யப்ப பக்தர்கள் கோவிலின் மேல்தளத்திற்கு சென்று செல்போனில் செல்பி எடுத்து விளையாடினர்.

மேல்தளத்தில் பக்தர்கள் செல்ல தடை உள்ள நிலையில் சர்வ சாதாரணமாக ஏராளமான பக்தர்கள் கோவிலின் விமானம் மற்றும் கோபுரங்கள் உள்ள பகுதிக்கு சென்று செல்பி எடுத்து கொண்டிருந்தது கோவிலின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ளது. உடனடியாக தமிழக இந்து சமயஅறநிலையத்துறை அதிகாரிகள் கோவிலின் மேல்தளத்திற்கு பக்தர்கள் செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. அதுபோல் ஏராளமான அய்யப்ப பக்தர்கள் கோவிலின் மேல் தளத்திற்கு சென்று செல்பி எடுத்தபடி வேடிக்கை பார்க்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News