வழிபாடு

புன்னக்காயல் தூய ராஜகன்னி மாதா ஆலய தேர்பவனி

Published On 2022-10-10 08:02 GMT   |   Update On 2022-10-10 08:02 GMT
  • தேர் பவனி முக்கிய விதி வழியாக சென்று மீண்டும் ஆலயத்திற்கு வந்தது.
  • திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.

ஆத்தூரை அடுத்துள்ள புன்னக்காயல் தூய ராஜகன்னி மாதா ஆலயத்தில் 471-வது ஆண்டு பெருவிழா கடந்த 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழா நாட்களில் காலையில் திருப்பலியும், மாலையில் ஜெபமாலை மறையுறை, நற்கருணை ஆசீர் நடைபெற்றது.

திருவிழாவில் 8-ம்திருவிழா அன்று மாலையில் நற்கருணை பவனி ஆலயத்தில் இருந்து தொடங்கியது. முக்கிய வீதிகள் வழியாக சென்று கடற்கரை வரை சென்று மீண்டும் நற்கருணை பவனி ஆலயத்தை வந்தடைந்தது.

இந்த நற்கருணை பவனி மணப்பாடு மறைவட்ட முதன்மை குரு ஜான் செல்வம் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.

இதில் தூத்துக்குடி பாத்திமா நகர் உதவி பங்கு சந்தை விமல்ஜன் அடிகளார், பெரியதாழை உதவி பங்கு தந்தை கிங்ஸிலின் அடிகளார், அடைக்கலாபுரம் புனித சூசை அறநிலைய நிர்வாகி சில்வ ஸ்டர் அடிகளார், கூட்டபனை பங்கு தந்தை லோஷன் அடிகளார் ஆகியோர் கலந்து கொண்டனர். 9-ம் திருவிழா அன்று காலை 10 மணி அளவில் தூய ராஜ கன்னி மாதா சொரூபத்திற்கு மகுடம் அணிவிக்கும் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சிறப்பு திருப்பலி நடைபெற்றது. மாலையில் திருவிழா ஆராதனை நடைபெற்றது.

இதில் தூத்துக்குடி இளையோர் பணிக்குழு இயக்குனர் ரஞ்சித் குமார் கருடோசா அடிகளார், குரூஸ்புரம் உதவி பங்கு சந்தை சுதர்சன அடிகளார், புன்னக்காயல் மூத்த பங்கு தந்தையும் திருச்சி தமிழ் இலக்கிய கழகத்தின் செயலாளருமான அமுதன் அடிகளார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இரவு தூய ராஜகன்னி மாதா சொரூப தேர் பவனி நடைபெற்றது. திருவிழாவில் சிகர நிகழ்ச்சியாக நேற்று அதிகாலை 4 மணியளவில் அன்னையின் திருஉருவத்தேரின் முன்பு ஜான் சுரேஷ் அடிகளார் தலைமையில் திருப்பலி நடைபெற்றது..

தொடர்ந்து காலை 7.30 மணி அளவில் திருவிழா ஆடம்பர கூட்டு திருப்பலி தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் ஆண்டகை தலைமையில் நடைபெற்றது. பின்னர் தேர் பவனி முக்கிய விதி வழியாக சென்று மீண்டும் ஆலயத்திற்கு வந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். திருவிழாவையொட்டி புன்னக்காயல் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

Tags:    

Similar News