வழிபாடு

பாய்மரங்கள் ஏற்றப்பட்டதையும், அதில் கலந்து கொண்ட இஸ்ஸாமியர்களையும் படத்தில் காணலாம்.

நாகூர் தர்கா கந்தூரி விழாவையொட்டி 5 மினாராக்களிலும் பாய்மரங்கள் ஏற்றப்பட்டது

Published On 2022-12-22 07:36 GMT   |   Update On 2022-12-22 07:36 GMT
  • 24-ந்தேதி கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
  • ஜனவரி 2-ம்தேதி சந்தன கூடு ஊர்வலம் நடக்கிறது.
  • 3-ம் தேதி சந்தனம் பூசும் நிகழ்வு நடக்கிறது.

நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரில் புகழ் பெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது. இந்த தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா நடை பெறுவது வழக்கம்.

அதன்படி வருகிற 24-ந்தேதி 466-ம் ஆண்டு கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனை முன்னிட்டு இன்று காலை ஆண்டவர் தர்காவில் பரம்பரை கலிபா தலைமையில் சிறப்பு துவா ஓதப்பட்டது. பின்னர் மங்கள வாத்தியங்கள், அதிர்வேட்டுக்கள் முழங்க 5 மினாராக்களிலும் பாய்மரங்கள் ஏற்றப்பட்டது.

அப்போது, கூடியிருந்த நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் கந்தூரி விழாவை சிறப்பிக்கும் விதமாக அனைவருக்கும் கற்கண்டு மற்றும் இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தனர்.

விழாவில் முக்கிய நிகழ்ச்சியான 24ம் தேதி கொடியேற்று வைபவமும், அதனைத் தொடர்ந்து ஜனவரி 2-ம் தேதி நாகையில் இருந்து சந்தன கூடு ஊர்வலமும் 3-ம் தேதி அதிகாலை சந்தனம் பூசும் நிகழ்வும் நடைபெறுகிறது.

Tags:    

Similar News