வழிபாடு

கந்தூரி விழாவை முன்னிட்டு நாகூர் தர்காவில் சந்தனம் அரைக்கும் பணி தொடங்கியது

Published On 2023-06-13 05:35 GMT   |   Update On 2023-06-13 05:35 GMT
  • 19-ந்தேதி கந்தூரி விழா தொடங்குகிறது.
  • 21-ந்தேதி சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடக்கிறது.

நாகை மாவட்டம் நாகூர் தர்காவில் வருகிற 19-ந்தேதி சின்ன ஆண்டவர் என்று அழைக்கப்படும் ஹஜ்ரத் செய்யது முஹம்மது யூசுப் சாஹிப்பின் கந்தூரி விழா தொடங்குகிறது.

தொடர்ந்து வருகிற 21-ந்தேதி அன்னாரின் புனித சமாதியில் சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடக்கிறது.

விழாவையொட்டி நேற்று சந்தனம் அரைக்கும் பணி நாகூர் தர்காவில் தொடங்கியது.

இந்த பணி நாகூர் தர்கா பரம்பரை டிரஸ்டிகளால் துவா ஓதப்பட்டு தொடங்கி வைக்கப்பட்டது.

Tags:    

Similar News