வழிபாடு

பிரம்மோற்சவ விழாவையொட்டி மணக்குள விநாயகருக்கு கடல் தீர்த்தவாரி

Published On 2022-09-11 05:29 GMT   |   Update On 2022-09-11 05:29 GMT
  • இன்று இரவு தெப்ப உற்சவம் நடக்கிறது.
  • 17-ந்தேதி ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.

புதுச்சேரியில் பிரசித்திப்பெற்ற மணக்குள விநாயகர் கோவிலில் 62-ம் வருட பிரம்மோற்சவ விழா கடந்த 31-ந்தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. இவ்விழா வருகிற 23-ந்தேதி வரை நடக்கிறது. விழா நாட்களில் காலையில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகமும், இரவில் வெள்ளி யானை, இந்திர, குதிரை, முத்து பல்லக்கு உள்ளிட்ட பல்வேறு வாகனத்தில் விநாயகர் வீதிஉலாவும் நடைபெற்றது.

விழாவில் நேற்று காலை புதுவை கடற்கரையில் கடல் தீர்த்தவாரி நடந்தது. அப்போது வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகர் வீதிஉலா கடற்கரைக்கு கொண்டு வரப்பட்டது. அதனைதொடர்ந்து விநாயகருக்கு பல்வேறு மங்கல பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. விழாவில் இன்று தெப்ப உற்சவமும், 17-ந்தேதி ஊஞ்சல் உற்சவமும், 23-ந்தேதி 108 சங்காபிஷேகமும் நடைபெறுகிறது.

Tags:    

Similar News