வழிபாடு
null

கோடி நன்மைகளை அள்ளித்தரும் குருபகவான்!

Published On 2024-04-16 03:46 GMT   |   Update On 2024-04-16 06:50 GMT
  • குரு பார்வை பதியும் இடமெல்லாம் வளம் கொழிக்கும்.
  • வெற்றி வாய்ப்புகள் வீடு தேடி வரும்.

குரோதி வருடம் சித்திரை மாதம் 18-ந் தேதி புதன்கிழமை அன்று, மாலை 5.21 மணிக்கு கார்த்திகை நட்சத்திரம் 2-ம் பாதத்தில் ரிஷப ராசிக்கு குருபகவான் பெயர்ச்சியாகிறார். 'குரு பார்க்க கோடி நன்மை' என்பதற்கேற்ப, தன் பார்வை பலத்தால் மக்களுக்கு மிகுந்த நற்பலன்களை வழங்குவார். குரு தன்னுடைய பார்வையால், 5, 7, 9 ஆகிய இடங்களைப் பார்த்துப் புனிதப்படுத்துவார்.

இந்த குருப்பெயர்ச்சிக்கு முன்னதாக, குரு சன்னிதியில் கூட்டுப் பிரார்த்தனைகளை மேற்கொள்ள வேண்டும். ஏனெனில் இந்த குருவானவர், தன்னுடைய பகை கிரகமான சுக்ர வீட்டிற்கு அல்லவா செல்கிறார். அதற்காக நாம் பயப்படவும் தேவை இல்லை. 'குரு பார்க்க கோடி நன்மை' என்றும், குரு சேர்ந்தால் கோடி தோஷம் நிவர்த்தி என்றும் ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.

எதிரியாக இருந்தாலும் எதிரில் வந்து குரு பார்த்தால், பகை உணர்வு மாறி பாச உணர்வு கூடும். எனவே இந்த குருப்பெயர்ச்சி எல்லோர் வாழ்விலும் எதிர் பாராத மாற்றங்களையும், ஏற்றங்களையும் வழங்கப்போகிறது. குரு பார்வை பதியும் இடமெல்லாம் வளம் கொழிக்கும்.

இந்த குருப்பெயர்ச்சியின் விளைவாக, கன்னி, விருச்சிகம், மகரம் ஆகிய மூன்று ராசிகளையும் குரு நேரடியாக பார்க்கிறார். எனவே அந்தராசிக்காரர்களுக்கு தொட்டது துலங்கும், தொழில் வளம் சிறக்கும். வெற்றி வாய்ப்புகள் வீடு தேடி வரும்.

விரும்பியபடியே காரியம் நடைபெறும். வருமானம் உயரும். வாகன யோகம் வந்து சேரும். செல்வாக்கு மிக்கவர்களாக தேசத்தில் பவனி வரும் வாய்ப்பு உண்டு.

இவை தவிர, ஜென்ம குருவாக ரிஷபத்திற்கும், அர்த்தாஷ்டம குருவாக கும்பத்திற்கும், அஷ்டமத்து குருவாக துலாத்திற்கும், விரய குருவாக மிதுனத்திற்கும் இந்த குருப்பெயர்ச்சி அமைவதால் மேற்கண்ட ராசியில் பிறந்தவர்களும், வளர்ச்சி பெற நினைப்பவர்களும் தங்கள் சுய ஜாதக அடிப்படையில் நடைபெறும் தசாபுத்தி பலம் பார்த்து, அதற்குரிய அனுகூலம் தரும் ஆலயங்களைத் தேர்ந்தெடுத்து யோகபலம் பெற்ற நாளில் சென்று வழிபட வேண்டியது அவசியம்.

அவ்வாறு செய்வதால் திருமணம், புத்திரப்பேறு, தொழில் முன்னேற்றம், வருமான உயர்வு, வீடு கட்டும் யோகம், வழக்கில் வெற்றி உத்தியோக உயர்வு குடும்பத்தில் மகிழ்ச்சி போன்றவை தக்கவிதத்தில் நடைபெறும்.

ரிஷபத்தில் சஞ்சரிக்கும் குருபகவான் இடையில் வக்ரம் பெறுகிறார். வக்ர காலத்தில் சிலருக்கு வளர்ச்சியும், சிலருக்கு தளர்ச்சியும் ஏற்படும். இதற்கிடையில் 26.4.2025 அன்று ராகு-கேது பெயர்ச்சியும் நிகழ்கிறது. இவற்றைப் பொறுத்தும், சுழலும் மற்ற கிரகங்களின் அமைப்பைப் பொறுத்தும் குருப்பெயர்ச்சி பலன்கள் இப்புத்தகத்தில் வழங்கப்பட்டுள்ளது.

ரிஷப குருவின் சஞ்சாரம்

1.5.2024 முதல் 11.6.2024 வரை கார்த்திகை நட்சத்திரக் காலில் குரு பகவான் (சூரியன் சாரம்)

12.6.2024 முதல் 18.8.2024 வரை ரோகிணி நட்சத்திரக் காலில் குரு பகவான் (சந்திரன் சாரம்)

19.8.2024 5 7.12.2024 நட்சத்திரக் காலில் குரு பகவான் (செவ்வாய் சாரம்)

8.12.2024 முதல் 10.2.2025 வரை ரோகிணி நட்சத்திரக் காலில் குரு பகவான் (சந்திரன் சாரம்) வக்ரம்

11.2.2025 முதல் 4.4.2025 வரை ரோகிணி நட்சத்திரக் காலில் குரு பகவான் (சந்திரன் சாரம்) வக்ர நிவர்த்தி

5.4.2025 முதல் 11.5.2025 வரை மிருகசீரிஷ நட்சத்திரக் காலில் குரு பகவான் (செவ்வாய் சாரம்)

Tags:    

Similar News