மக்களின் மன இருளை நீக்கும் மகா தீப ஜோதி தரிசனம்!
- பரணி நட்சத்திரத்தன்று கொண்டாடப்படும் விழா என்பதால் பரணி தீபம் என்று கூறுவார்கள்.
- ஐந்து அகல் விளக்கில் ஐந்து விளக்குகளாக தோற்றிவிப்பார்கள்.
கார்த்திகை தீபம் என்றாலே உலகில் உள்ள சிவபக்தர்களின் நினைவில் தோன்றுவது திருவண்ணாமலை. கார்த்திகை மாதத்தில் பரணி நட்சத்திரத்தன்று கொண்டாடப்படும் விழா என்பதால் ஏற்றப்படும் தீபத்தை பரணி தீபம் என்று கூறுவார்கள்.
கார்த்திகை தீபத்தன்று காலையில் அருணாசலேஸ்வரர் ஆலயத்தில், மூலஸ்தானத்தில் ஓர் விளக்கை ஏற்றி அதை ஐந்து அகல் விளக்கில் ஐந்து விளக்குகளாக தோற்றிவிப்பார்கள்.
ஓர் விளக்கை தத்துவரீதியாக ஏகன் என்றும், பரம்பொருள் என்றும், அதுவே ஐந்தாக வடிவம் எடுக்கும்போது அநேகன் என்றும் பரம்பொருளில் (ஒளிவடிவம்) ஐந்து பஞ்சபூதங்களால் உருவாகும் மனித உடலை, பஞ்ச தீபங்களாக உருவாக்கி அதன் பின் அன்று மாலையே அர்த்தநாரீஸ்வரர் நிகழ்ச்சியில் ஐந்து தீப விளக்குகள் ஒன்றாக ஏகனாக மக்களுக்கும் மாலை கொடிமரத்தின் முன் ஐந்து பஞ்சமூர்த்திகள் முன்பாக ஒற்றை தீபமாக ஏற்றப்படுகிறது.
பரம்பொருளில் இருந்து தோன்றி அனைத்து பொருட்களும் இறுதியில் அடைவது பரம்பொருளிலே என்பதை விளக்கின் நிகழ்ச்சி மூலமாக இந்த தத்துவத்தை விளக்குகிறது.
மாலையில் ஏற்றப்படும் தீபம் மகாதீபம் என்று அழைக்கப்படுகிறது ஏன் என்றால் மலை மீது மிகப்பெரிய தீபம் என்பதாலும் இத்தகைய புண்ணியம் வாய்ந்த இந்த திருத்தலத்தில் கூடுதல் புண்ணியமாக விசிறி சாமியார் என்று மக்களால் அன்புடன் அழைக்கப்படும் யோகிராம் சுரத்குமார், ரமண மகரிஷி, குகை நமச்சிவாயர், அருணகிரி நாதர், ஈசான்ய ஞான தேசிகர், மகான் சேஷாத்திரி சுவாமிகள், மூக்குப்பொடி சித்தர் போன்ற ஞானிகள் இத்திருத்தலத்தில் வாழ்ந்து மக்களுக்கு பல நல்ல நெறிகளை போதித்துள்ளனர்.