வழிபாடு

பண்ணாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா இன்று இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்குகிறது

Published On 2023-03-20 08:30 GMT   |   Update On 2023-03-20 08:51 GMT
  • 28-ந்தேதி கம்பம் சாட்டுவிழா நடக்கிறது.
  • 4-ந்தேதி குண்டம் திருவிழா நடக்கிறது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ளது பண்ணாரியம்மன் கோவில். இந்த கோவிலில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் அதிகளவில வருகை தருவார்கள். அதோடு இல்லாமல் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி, அமாவாசை மற்றும் முக்கிய நாட்களிலும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்வார்கள்.

மிகவும் சக்தி வாய்ந்த கோவில் என்பதால் ஈரோடு, கோவை, சேலம், திருப்பூர், உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருவார்கள். இவர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற அம்மனை வணங்கி செல்வார்கள்.பின்னர் தங்கள் வேண்டுதல் நிறைவேறியதும் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்து வார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் பண்ணாரியம்மன் கோவிலில் பங்குனி மாதத்தில் குண்டம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதே போல் இந்த ஆண்டும் குண்டம் திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. கோ விலை சுற்றிஉள்ள இடங்கள் சுத்தப்படுத்தப்பட்டு பக்தர்கள் வசதிக்காக மிகப்பிரமாண்டமாக பந்தல் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

பண்ணாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா இன்று இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்குகிறது. தொடர்ந்து அடுத்த வாரம் 28-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு கம்பம் சாட்டுவிழா நடக்கிறது. பின்னர் அடுத்த மாதம் 4-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை குண்டம் திருவிழா நடக்கிறது.

இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு குண்டம் இறங்குவார்கள். இதற்காக 2 நாட்களுக்கு முன்பே பக்தர்கள் இடம் பிடித்து வரிசையில் காத்திருப்பார்கள். குண்டம் விழாவையொட்டி பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்களும் இயக்கப்படும். மேலும் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்படும். இதே போல் வனப்பகுதியில் கோவில் அமைந்து உள்ளதால் வனத்துறை யினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

Tags:    

Similar News