வழிபாடு

ஆஷாட நவராத்திரி: சிறப்பு அலங்காரத்தில் வராஹி அம்மன்

Published On 2023-06-19 06:42 GMT   |   Update On 2023-06-19 06:42 GMT
  • 27-ந்தேதி தொடர்ந்து ஆஷாட நவராத்திரி நடக்கிறது.
  • வராஹி அம்மனுக்கு பல்வேறு திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

திருப்பரங்குன்றம் கோட்டை வராஹி அம்மன் வழிபாட்டு மன்றத்தின் சார்பில் வராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி சிறப்பு வழிபாடு நேற்று தொடங்கியது.

வருகின்ற 27-ந்தேதி தொடர்ந்து ஆஷாட நவராத்திரி நடக்கிறது. நிகழ்ச்சியையொட்டி வராஹி அம்மனுக்கு பல்வேறு திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகமும், மகாதீப, தூப, ஆராதனையும் நடந்தது.

தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வராகி அம்மனை வழிபட்டனர்.

Tags:    

Similar News