வழிபாடு

மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மனுக்கு 2 லட்சத்து 51 ஆயிரம் வளையல்களால் அலங்காரம்

Published On 2023-07-22 07:44 GMT   |   Update On 2023-07-22 07:44 GMT
  • உற்சவ அம்மனுக்கு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.
  • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி கும்பிட்டனர்.

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆடிப்பூர விழா நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு கருவறையில் உள்ள அம்மனுக்கும் சிவபெருமானுக்கும் பால் தயிர், சந்தனம், மஞ்சள், குங்குமம், விபூதி, இளநீர், பஞ்சாமிர்தம், தேன், பன்னீர் உள்ளிட்டவைகளாலும், வாசனை திரவியங்களாலும் அபிஷேகமும், தங்க கவச அலங்காரமும் நடந்தது.

மேலும் ஒரு லட்சத்து ஒன்று வளையல்களாலும், உற்சவ அம்மனுக்கு 2 லட்சத்து 51 ஆயிரம் வளையல்களாலும் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி கும்பிட்டனர்.

விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர் குழுத்தலைவர் சந்தானம் பூசாரி, அறங்காவலர்கள் செந்தில்குமார் பூசாரி, தேவராஜ் பூசாரி, ராமலிங்கம் பூசாரி, செல்வம் பூசாரி, சரவணன் பூசாரி, வடிவேல் பூசாரி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News