வழிபாடு
காளிகாம்பாள் கோவில் பிரம்மோற்சவ விழா 3-ந்தேதி தொடங்குகிறது
பிரம்மோற்சவ விழா நாட்களில் பூதகி விமானம், இரட்டைத்தலை சிம்ம வாகனம், ரிஷப வாகனம், சிமம வாகனம், யானை வாகனம், குதிரை வாகனம் ஆகிய வாகனங்களில் அம்மன் வீதி உலா வருகிறார்.
சென்னை பாரிமுனையில் உள்ள காளிகாம்பாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா 3-ந்தேதி தொடங்கி 12-ந்தேதி வரை 10 நாட்கள் விழா கோலாகலமாக நடக்கிறது. 3-ந்தேதி காலை 9 மணிக்கு கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது. இரவு அம்பாள் வீதி உலா நடக்கிறது.
9-ந்தேதி காலை பூந்தேர் தேரோட்டம் இரவு தொட்டி உற்சவம். 11-ந்தேதி இரவு 7 மணிக்கு ஸ்ரீ சக்ர கிண்ணித்தேர் தேரோட்டம், 12-ந்தேதி காலை தீர்த்தவாரி உற்சவம், மாலை 6 மணிக்கு கொடியிறக்கம் நடக்கிறது.
பிரம்மோற்சவ விழா நாட்களில் பூதகி விமானம், இரட்டைத்தலை சிம்ம வாகனம், ரிஷப வாகனம், சிமம வாகனம், யானை வாகனம், குதிரை வாகனம் ஆகிய வாகனங்களில் அம்மன் வீதி உலா வருகிறார்.
13-ந்தேதி முதல் விடையாற்றி உற்சவம் ஆரம்பமாகிறது. 13-ந்தேதி இரவு பந்தம்பறி உற்சவம், 14-ந்தேதி இரவு புஷ்ப பல்லக்கு, 15-ந்தேதி இரவு அம்மனுக்கு சாந்தி அபிஷேகம், 28-ந்தேதி மாலை 5 மணி முதல் இரவு 7 மணிக்குள் அம்பாள் ஆஸ்தான பிரவேச உற்சவம் நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் சர்வேஸ்வரன், அறங்காவலர்கள் யுவராஜ், மோகன், ரமேஷ், சுப்ரமணி உள்ளிட்ட நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.
9-ந்தேதி காலை பூந்தேர் தேரோட்டம் இரவு தொட்டி உற்சவம். 11-ந்தேதி இரவு 7 மணிக்கு ஸ்ரீ சக்ர கிண்ணித்தேர் தேரோட்டம், 12-ந்தேதி காலை தீர்த்தவாரி உற்சவம், மாலை 6 மணிக்கு கொடியிறக்கம் நடக்கிறது.
பிரம்மோற்சவ விழா நாட்களில் பூதகி விமானம், இரட்டைத்தலை சிம்ம வாகனம், ரிஷப வாகனம், சிமம வாகனம், யானை வாகனம், குதிரை வாகனம் ஆகிய வாகனங்களில் அம்மன் வீதி உலா வருகிறார்.
13-ந்தேதி முதல் விடையாற்றி உற்சவம் ஆரம்பமாகிறது. 13-ந்தேதி இரவு பந்தம்பறி உற்சவம், 14-ந்தேதி இரவு புஷ்ப பல்லக்கு, 15-ந்தேதி இரவு அம்மனுக்கு சாந்தி அபிஷேகம், 28-ந்தேதி மாலை 5 மணி முதல் இரவு 7 மணிக்குள் அம்பாள் ஆஸ்தான பிரவேச உற்சவம் நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் சர்வேஸ்வரன், அறங்காவலர்கள் யுவராஜ், மோகன், ரமேஷ், சுப்ரமணி உள்ளிட்ட நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.