வழிபாடு
ஜெயங்கொண்டநாதர் கோவிலில் திரட்டுப்பால் ஆராதனை விழா

ஜெயங்கொண்டநாதர் கோவிலில் திரட்டுப்பால் ஆராதனை விழா

Published On 2022-06-01 06:11 GMT   |   Update On 2022-06-01 06:11 GMT
ஜெயங்கொண்டநாதர் கோவிலில் உள்ள வியாசர் லிங்கத்துக்கும், ஸ்ரீ மகாவிஷ்ணுவுக்கும் திரட்டுப்பால் ஆராதனை செய்து அதை யானையின் மீது ஏற்றி ராஜகோபாலசுவாமிக்கு ஊர்வலமாக எடுத்து வந்து நெய்வேத்தியம் செய்யப்பட்டது.
மன்னார்குடியில் திரட்டுப்பால் ஆராதனை விழா நடந்தது. மன்னார்குடி பாமணிஆற்றின் வடகரையில் உள்ள ஜெயங்கொண்டநாதர் கோவிலில் உள்ள வியாசர் லிங்கத்துக்கும், ஸ்ரீ மகாவிஷ்ணுவுக்கும் திரட்டுப்பால் ஆராதனை செய்து அதை யானையின் மீது ஏற்றி ராஜகோபாலசுவாமிக்கு ஊர்வலமாக எடுத்து வந்து நெய்வேத்தியம் செய்யப்பட்டது.

இதை நினைவு கூறும் வகையில் மன்னார்குடியில் கடந்த 17 ஆண்டுகளாக செங்கமலத்தாயார் மகளிர் கல்லூரி அறக்கட்டளை சார்பில் திரட்டுப்பால் ஆராதனை விழா நடத்தப்பட்டு வருகிறது. நேற்றுமுன்தினம் 18-வது ஆண்டாக வைகாசி மாத ரோகிணி நட்சத்திரத்தை யொட்டி நடத்தப்பட்ட இவ்விழாவில், மன்னார்குடி ஜெயங்கொண்ட நாதர் கோவிலில் ஆராதனை செய்யப்பட்ட திரட்டுப்பால் ராஜகோபால சுவாமி கோவில் யானை செங்கமலத்தின் மீது ஏற்றி, ராஜகோபால சுவாமி கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News