வழிபாடு
12 சுவாமிகள் சேவை சாதிக்கும் நிகழ்ச்சி

12 சுவாமிகள் சேவை சாதிக்கும் நிகழ்ச்சி

Published On 2022-05-28 04:13 GMT   |   Update On 2022-05-28 04:13 GMT
12 சிவபெருமான்களும் தங்களுடைய தேவியருடன் ஒருசேர நாங்கூர் மதங்கீஸ்வரர் கோவிலில் மதங்க மகரிஷி என்பவருக்கு காட்சி அளிக்கும் வைபவம் ரிஷபாரூட சேவையாக ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
சீர்காழி அருகே நாங்கூர் கிராமத்தில் உள்ள மதங்கீஸ்வரர் கோவில் மற்றும் சுற்றுப்புறங்களில் நம்புவாருக்கு அன்பர் சாமி கோவில், சுந்தரேஸ்வரர் கோவில், அமிர்தபுரீஸ்வரர் கோவில், கைலாசநாதர் கோவில், நயனிபுரம் நயன வரதேஸ்வரர் கோவில், அல்லிவிளாகம் நாகநாதர் கோவில், திருக்காட்டுப்பள்ளி ஆரண்யேஸ்வரர் கோவில், மங்கைமடம் யோகநாதன் கோவில், காத்திருப்பு சொர்ணபுரீஸ்வரர் கோவில், அன்னப்பன்பேட்டை கலிகாமேஸ்வரர் கோவில், பெருந்தோட்டம் ஐராவதேஸ்வரர் கோவில் என 12 சிவபெருமான் கோவில்கள் உள்ளன.

இந்த 12 சிவபெருமான்களும் தங்களுடைய தேவியருடன் ஒருசேர நாங்கூர் மதங்கீஸ்வரர் கோவிலில் மதங்க மகரிஷி என்பவருக்கு காட்சி அளிக்கும் வைபவம் ரிஷபாரூட சேவையாக ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல, இந்த ஆண்டு நாளை(ஞாயிற்றுக்கிழமை) காலை விநாயகர் பூஜையுடன் தொடங்குகிறது.

30-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணி அளவில் 12 சிவபெருமானும் மதங்கீஸ்வரர் கோவிலில் எழுந்தருளுதல் நிகழ்ச்சி நடக்கிறது. அதனைத்தொடர்ந்து ஜெப ஹோமமும், அபிஷேக ஆராதனைகளும் நடக்கின்றன. இரவு 7 மணி அளவில் 12 சிவபெருமானுக்கும் ஒருசேர திருக்கல்யாண நிகழ்ச்சியும், இரவு 10 மணி அளவில் 12 சிவபெருமானும் நந்தி பகவானுடன் மதங்க மகரிஷிக்கு காட்சியளிக்கும் நிகழ்ச்சியும் பின்னர் வீதிஉலாவும் நடக்கின்றன.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரிகள், பொறுப்பாளர்கள் மற்றும் கிராமமக்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News