வழிபாடு
திருப்பதியில் இன்று முதல் 15 ஆயிரம் நேரடி இலவச தரிசன டிக்கெட் வினியோகம்
அதிகாலை முதலே கோவிந்தராஜ சாமி சத்திரத்தில் அமைக்கப்பட்டுள்ள டிக்கெட் வழங்கும் கவுண்டர்கள் முன்பாக ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இன்று டிக்கெட் பெற்ற பக்தர்கள் நாளை தரிசனத்திற்கு செல்லலாம்.
திருப்பதி ஏழுமலையான் கோவில் கொரோனா தொற்று பரவல் காரணமாக ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட் உள்ளவர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். தொற்று பரவல் குறைய தொடங்கியதும் இலவச தரிசன டிக்கெட்டுகளும் ஆன்லைனில் வழங்கப்பட்டன.
ஆன்லைனில் தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்பட்ட சில நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் முன்பதிவாகி விடுகிறது. இதனால் ஏழுமலையானை தரிசனம் செய்ய முடியாமல் பக்தர்கள் அவதிப்பட்டு வந்தனர்.
வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஆன்லைன் தரிசன டிக்கெட் இல்லாமல் வரும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
பக்தர்களின் ஏமாற்றத்தை தவிர்ப்பதற்காக நேரடி இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்க வேண்டும் என பக்தர்கள் தேவஸ்தானத்திற்கு கோரிக்கை விடுத்தனர். பக்தர்களின் கோரிக்கையை ஏற்று இன்று முதல் 15 ஆயிரம் நேரடி இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்க தேவஸ்தானம் முடிவு செய்தது.
திருப்பதி அலிபிரி பஸ் நிலையம் அருகே உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ், கோவிந்தராஜ சாமி சத்திரம், ஸ்ரீநிவாசம் கெஸ்ட் ஹவுஸ் உட்பட 3 இடங்களில் நேரடி இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படும் என அறிவித்து இருந்தனர்.
அதன்படி இன்று காலை நேரடி இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கும் பணி தொடங்கியது.
அதிகாலை முதலே கோவிந்தராஜ சாமி சத்திரத்தில் அமைக்கப்பட்டுள்ள டிக்கெட் வழங்கும் கவுண்டர்கள் முன்பாக ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். பக்தர்கள் இடையே தள்ளு முள்ளு ஏற்படாமல் இருக்க போலீசார் மற்றும் தேவஸ்தான விஜிலென்ஸ் போலீசார் பக்தர்களை ஒழுங்குபடுத்தினர்.
ஸ்ரீனிவாசம் கெஸ்ட் ஹவுஸ் மற்றும் பூதேவி காம்ப்ளக்ஸ் ஆகிய 2 கவுண்டர்களிலும் பக்தர்கள் கூட்டம் இருந்தது. இன்று டிக்கெட் பெற்ற பக்தர்கள் நாளை தரிசனத்திற்கு செல்லலாம்.
திருப்பதியில் நேற்று 33,356 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 6,259 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.2.73 கோடி உண்டியல் வசூலானது.
ஆன்லைனில் தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்பட்ட சில நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் முன்பதிவாகி விடுகிறது. இதனால் ஏழுமலையானை தரிசனம் செய்ய முடியாமல் பக்தர்கள் அவதிப்பட்டு வந்தனர்.
வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஆன்லைன் தரிசன டிக்கெட் இல்லாமல் வரும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
பக்தர்களின் ஏமாற்றத்தை தவிர்ப்பதற்காக நேரடி இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்க வேண்டும் என பக்தர்கள் தேவஸ்தானத்திற்கு கோரிக்கை விடுத்தனர். பக்தர்களின் கோரிக்கையை ஏற்று இன்று முதல் 15 ஆயிரம் நேரடி இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்க தேவஸ்தானம் முடிவு செய்தது.
திருப்பதி அலிபிரி பஸ் நிலையம் அருகே உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ், கோவிந்தராஜ சாமி சத்திரம், ஸ்ரீநிவாசம் கெஸ்ட் ஹவுஸ் உட்பட 3 இடங்களில் நேரடி இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படும் என அறிவித்து இருந்தனர்.
அதன்படி இன்று காலை நேரடி இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கும் பணி தொடங்கியது.
அதிகாலை முதலே கோவிந்தராஜ சாமி சத்திரத்தில் அமைக்கப்பட்டுள்ள டிக்கெட் வழங்கும் கவுண்டர்கள் முன்பாக ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். பக்தர்கள் இடையே தள்ளு முள்ளு ஏற்படாமல் இருக்க போலீசார் மற்றும் தேவஸ்தான விஜிலென்ஸ் போலீசார் பக்தர்களை ஒழுங்குபடுத்தினர்.
ஸ்ரீனிவாசம் கெஸ்ட் ஹவுஸ் மற்றும் பூதேவி காம்ப்ளக்ஸ் ஆகிய 2 கவுண்டர்களிலும் பக்தர்கள் கூட்டம் இருந்தது. இன்று டிக்கெட் பெற்ற பக்தர்கள் நாளை தரிசனத்திற்கு செல்லலாம்.
திருப்பதியில் நேற்று 33,356 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 6,259 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.2.73 கோடி உண்டியல் வசூலானது.