வழிபாடு
திருவூடல் திருவிழாவும்... காரணமும்..
ஒவ்வொரு ஆண்டும் திருவண்ணாமலை தலத்தில் பொங்கலுக்கு மறுநாள் ‘திருவூடல்’ வைபவம் நடைபெறும். இந்த வைபவர் நடந்த வரலாறு மிகவும் சுவாரசியமானது.
முன்காலத்தில் பிருங்கி என்ற முனிவர் வாழ்ந்தார். அவர் ஈசனின் மீது மிகுந்த பக்தி செலுத்தியவர். சிவபெருமானைத் தவிர, வேறு யாரையும் வழிபட மாட்டேன் என்ற கொள்கைப் பிடிப்பு கொண்டவர். ஒருமுறை அவர், கயிலை மலைக்கு வந்தார். அங்கு ரிஷப வாகனத்தின் மீது, சிவபெருமானும், பார்வதியும் அருகருகே அமர்ந்திருந்தனர்.
இதையடுத்து பொன் வண்டாக உருவெடுத்த பிருங்கி முனிவர், சிவபெருமானுக்கும், பார்வதிக்கும் இடையில் புகுந்து, சிவபெருமானை மட்டும் சுற்றி வந்து வழிபட்டார். இதனால் கோபம் கொண்ட பார்வதிதேவி, பிருங்கி முனிவரிடம், “என்னை வழிபடாத உன்னுடைய சக்தி அகலட்டும்” என்று சபித்தார்.
சக்தியை இழந்த பிருங்கி முனிவர், நிற்கக் கூட தெம்பு இல்லாமல் கீழே விழப்போனார். இதைக் கண்டு மனமிரங்கிய சிவபெருமான், பிருங்கி முனிவருக்கு ஊன்றுகோல் ஒன்றை வழங்கினார். அப்போது பிருங்கி முனிவர், சிவபெருமானிடம் தனக்கு ‘மோட்சம் வேண்டும்’ என்று வேண்டினார். அதை அளிக்கவும் சிவபெருமான் தயாரானார்.
ஆனால் ஏற்கனவே பிருங்கி முனிவருக்கு, ஊன்றுகோல் கொடுத்து சக்தி அளித்ததில் வருத்தம் அடைந்திருந்த பார்வதி, இப்போது அவருக்கு மோட்சமும் வழங்க சிவபெருமான் முன்வந்ததில் கோபம் கொண்டார். இருவருக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. இதனால் சிவபெருமான் மீது பார்வதிக்கு ஊடல் உண்டானது. அவர் சிவபெருமானைப் பிரிந்து சென்று விட்டார்.
பார்வதியை சமாதானம் செய்வதற்காக, சுந்தரமூர்த்தி நாயனாரை சிவபெருமான் தூது அனுப்பினார். ஆனால் அந்த தூது வெற்றி பெறவில்லை. பக்தனுக்கு உதவுவதா?, இல்லையென்றால் மனைவியை சமாதானம் செய்வதா? என்று தவித்துப் போனாா் சிவபெருமான். இருவருமே முக்கியம் என்ற முடிவுக்கு வந்த சிவபெருமான், இரவு முழுவதும் தனியாக இருந்தார். மறுநாள் பக்தனுக்கு அருள்பாலித்து விட்டு, மீண்டும் பார்வதியிடம் வந்து அவரது கோபத்தை தணித்தார். இதனால் அவர்களின் ஊடல் முடிவுக்கு வந்தது.
இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் திருவண்ணாமலை தலத்தில் பொங்கலுக்கு மறுநாள் நடைபெறுவது வழக்கம். அண்ணாமலையார், உண்ணாமுலையம்மன், சுந்தரர் ஆகிய மூவரும் மண்டபத்தில் எழுந்தருள்வார்கள். பின்னர் அண்ணாமலையாரும், உண்ணாமுலையம்மனும் திட்டி வாசல் வழியாக வெளிவருவார்கள். இதையடுத்து மாடவீதிகளில் மூன்று முறை சுற்றி வருவார்கள். சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோரை குறிக்கும் வகையில் இந்த மூன்று முறை மாட வீதி உலா வரும் நிகழ்வு நடைபெறும். அப்போது பக்தர்கள் மண்டகப்படி செய்து அண்ணாமலையாருக்கு சிறப்பு செய்வார்கள்.
அன்று மாலை திருவூடல் தெருவில் சிவனும், பார்வதியும் `ஊடல்' கொள்ளும் நிகழ்ச்சிகள் நடத்தப்படும். அப்போது சிவபெருமானிடம் அம்பாள் கோபம் கொண்டு கோவிலுக்குள் சென்றுவிடுவார். இதைத் தொடர்ந்து அவரை சமரசம் செய்யும் நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
உண்ணாமுலையம்மன் சமரசம் ஆகாததால் அண்ணாமலையார் தனியாக புறப்பட்டுச்செல்வார். அவர் குமரன்கோவில் சென்று அமர்ந்து விடுவார். அங்கு அவருக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படும். அடுத்த நாள் காலையில் அண்ணாமலையார் கிரிவலம் புறப்படுவார். இந்த கிரிவலம் மிகவும் விசேஷமானது.
கிரிவலப் பாதையில் அண்ணாமலையாருக்கு சிறப்புகள் செய்யப்படும். பிருங்கி முனிவருக்கு அண்ணாமலையார் காட்சி கொடுத்து அருள்புரிவார். அன்று மாலை அண்ணாமலையார் ஆலயம் திரும்புவார். அப்போது உண்ணாமுலையம்மனுடன் சமரசம் செய்து கொள்வார். இதனால் அன்னையின் ஊடல் தீர்ந்து விடும். இறுதியில் அண்ணாமலையாரும், உண்ணாமுலையம்மனும் ஒரு சேர அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்கள்.
தன்னையே நம்பி இருக்கும் பக்தனுக்காக சிவபெருமான் எதையும் தியாகம் செய்வார் என்பதை இந்த உலகத்துக்கு உணர்த்தவே இந்த `திருவூடல்' திருவிழா நடத்தப்படுகிறது.
இதையடுத்து பொன் வண்டாக உருவெடுத்த பிருங்கி முனிவர், சிவபெருமானுக்கும், பார்வதிக்கும் இடையில் புகுந்து, சிவபெருமானை மட்டும் சுற்றி வந்து வழிபட்டார். இதனால் கோபம் கொண்ட பார்வதிதேவி, பிருங்கி முனிவரிடம், “என்னை வழிபடாத உன்னுடைய சக்தி அகலட்டும்” என்று சபித்தார்.
சக்தியை இழந்த பிருங்கி முனிவர், நிற்கக் கூட தெம்பு இல்லாமல் கீழே விழப்போனார். இதைக் கண்டு மனமிரங்கிய சிவபெருமான், பிருங்கி முனிவருக்கு ஊன்றுகோல் ஒன்றை வழங்கினார். அப்போது பிருங்கி முனிவர், சிவபெருமானிடம் தனக்கு ‘மோட்சம் வேண்டும்’ என்று வேண்டினார். அதை அளிக்கவும் சிவபெருமான் தயாரானார்.
ஆனால் ஏற்கனவே பிருங்கி முனிவருக்கு, ஊன்றுகோல் கொடுத்து சக்தி அளித்ததில் வருத்தம் அடைந்திருந்த பார்வதி, இப்போது அவருக்கு மோட்சமும் வழங்க சிவபெருமான் முன்வந்ததில் கோபம் கொண்டார். இருவருக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. இதனால் சிவபெருமான் மீது பார்வதிக்கு ஊடல் உண்டானது. அவர் சிவபெருமானைப் பிரிந்து சென்று விட்டார்.
பார்வதியை சமாதானம் செய்வதற்காக, சுந்தரமூர்த்தி நாயனாரை சிவபெருமான் தூது அனுப்பினார். ஆனால் அந்த தூது வெற்றி பெறவில்லை. பக்தனுக்கு உதவுவதா?, இல்லையென்றால் மனைவியை சமாதானம் செய்வதா? என்று தவித்துப் போனாா் சிவபெருமான். இருவருமே முக்கியம் என்ற முடிவுக்கு வந்த சிவபெருமான், இரவு முழுவதும் தனியாக இருந்தார். மறுநாள் பக்தனுக்கு அருள்பாலித்து விட்டு, மீண்டும் பார்வதியிடம் வந்து அவரது கோபத்தை தணித்தார். இதனால் அவர்களின் ஊடல் முடிவுக்கு வந்தது.
இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் திருவண்ணாமலை தலத்தில் பொங்கலுக்கு மறுநாள் நடைபெறுவது வழக்கம். அண்ணாமலையார், உண்ணாமுலையம்மன், சுந்தரர் ஆகிய மூவரும் மண்டபத்தில் எழுந்தருள்வார்கள். பின்னர் அண்ணாமலையாரும், உண்ணாமுலையம்மனும் திட்டி வாசல் வழியாக வெளிவருவார்கள். இதையடுத்து மாடவீதிகளில் மூன்று முறை சுற்றி வருவார்கள். சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோரை குறிக்கும் வகையில் இந்த மூன்று முறை மாட வீதி உலா வரும் நிகழ்வு நடைபெறும். அப்போது பக்தர்கள் மண்டகப்படி செய்து அண்ணாமலையாருக்கு சிறப்பு செய்வார்கள்.
அன்று மாலை திருவூடல் தெருவில் சிவனும், பார்வதியும் `ஊடல்' கொள்ளும் நிகழ்ச்சிகள் நடத்தப்படும். அப்போது சிவபெருமானிடம் அம்பாள் கோபம் கொண்டு கோவிலுக்குள் சென்றுவிடுவார். இதைத் தொடர்ந்து அவரை சமரசம் செய்யும் நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
உண்ணாமுலையம்மன் சமரசம் ஆகாததால் அண்ணாமலையார் தனியாக புறப்பட்டுச்செல்வார். அவர் குமரன்கோவில் சென்று அமர்ந்து விடுவார். அங்கு அவருக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படும். அடுத்த நாள் காலையில் அண்ணாமலையார் கிரிவலம் புறப்படுவார். இந்த கிரிவலம் மிகவும் விசேஷமானது.
கிரிவலப் பாதையில் அண்ணாமலையாருக்கு சிறப்புகள் செய்யப்படும். பிருங்கி முனிவருக்கு அண்ணாமலையார் காட்சி கொடுத்து அருள்புரிவார். அன்று மாலை அண்ணாமலையார் ஆலயம் திரும்புவார். அப்போது உண்ணாமுலையம்மனுடன் சமரசம் செய்து கொள்வார். இதனால் அன்னையின் ஊடல் தீர்ந்து விடும். இறுதியில் அண்ணாமலையாரும், உண்ணாமுலையம்மனும் ஒரு சேர அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்கள்.
தன்னையே நம்பி இருக்கும் பக்தனுக்காக சிவபெருமான் எதையும் தியாகம் செய்வார் என்பதை இந்த உலகத்துக்கு உணர்த்தவே இந்த `திருவூடல்' திருவிழா நடத்தப்படுகிறது.