வழிபாடு
ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை திருப்பதி ஏழுமலையானுக்கு அணிவிப்பு

ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை திருப்பதி ஏழுமலையானுக்கு அணிவிப்பு

Published On 2022-01-17 11:05 IST   |   Update On 2022-01-17 11:05:00 IST
ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை மற்றும் கிளி, பட்டு வஸ்திரம் உள்ளிட்ட மங்கள பொருட்களை ஒரு கூடையில் வைத்து திருப்பதியில் இருந்து திருமலையில் உள்ள பெரிய ஜீயர் மடத்துக்குக் கொண்டு வரப்பட்டது.
தனுர் மாதத்தின் கடைசிநாளான நேற்று திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் திருப்பாவை பாராயண நிகழ்ச்சி நிறைவுநாள் நடந்தது. அதையொட்டி கோவிலில் உள்ள ஆண்டாள் சன்னதியில் சிறப்புப்பூஜைகள் நடந்தது. அப்போது ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை மற்றும் கிளி, பட்டு வஸ்திரம் உள்ளிட்ட மங்கள பொருட்களை ஒரு கூடையில் வைத்து திருப்பதியில் இருந்து திருமலையில் உள்ள பெரிய ஜீயர் மடத்துக்குக் கொண்டு வரப்பட்டது.

அந்த மாலை மற்றும் மங்கள பொருட்களை பெரிய ஜீயர் மடத்தில் வைத்து சிறப்புப்பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் அங்கிருந்து மங்கள வாத்தியங்கள் இசைக்க ஊர்வலமாக ஏழுமலையான் கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. கோவிலில் பூஜைகள் செய்து, மூலவர் ஏழுமலையானுக்கு ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை மற்றும் பட்டு வஸ்திரம் ஆகியவற்றை அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் பெரிய ஜீயர், சின்னஜீயர் சுவாமிகள் பங்கேற்றனர்.

Similar News