வழிபாடு
யாக நெருப்பில் தெரிந்த ஆஞ்சநேயர் உருவம்

யாக நெருப்பில் தெரிந்த ஆஞ்சநேயர் உருவம்

Published On 2022-01-03 11:04 IST   |   Update On 2022-01-03 11:04:00 IST
வலசில் வீர ஆஞ்சநேயர் கோவிலில் நடந்த யாக நெருப்பில் ஆஞ்சநேயர் திருஉருவம் தெரிந்தது. இதைக் கண்ட பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.
திருப்பூர் மாவட்டம், மூலனூர் அருகே வளையக்காரன் வலசில் வீர ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. அனுமன் ஜெயந்தி முன்னிட்டு இந்த கோவிலில் நேற்று சிறப்பு யாகம் நடைபெற்றது. இந்த யாகத்தில் வாசனை திரவியங்கள் கொஞ்சம் கொஞ்சமாக போடப்பட்டன. அப்போது நெருப்பில் ஆஞ்சநேயர் திருஉருவம் தெரிந்தது. இதைக் கண்ட பக்தர்கள் பரவசம் அடைந்து பயபக்தியுடன் ஆஞ்சநேயா, ஆஞ்சநேயா, ராம பக்தா என கரகோஷம் எழுப்பினர்.

நெருப்பில் ஆஞ்சநேயர் உருவம் தத்ரூபமாக தெரிந்த நிலையில் அந்த பகுதியில் குரங்குகளையே காண முடியாத நிலையிலும் திடீரென்று கோவிலுக்குள் 2 குரங்குகள் நுழைந்து கருவறையில் இருந்த பழங்களை எடுத்து சாப்பிட்டதை கண்ட பக்தர்கள் ஆஞ்சநேயரே வந்துவிட்டார் என பயபக்தியுடன் தரிசனம் செய்தனர்.

Similar News