வழிபாடு
ஆனந்தவல்லி சோமநாதர் கோவிலில் அஷ்டமி சப்பர ஊர்வலம்
மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாதர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி சப்பர ஊர்வலம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சிவன் கோவில்களில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் தேய்பிறை அஷ்டமியன்று உலக ஜீவராசிகளுக்கு படியளக்கும் விழா நடத்தப்படுகிறது. மானாமதுரையில் உள்ள ஆனந்தவல்லி சோமநாதர் கோவிலிலும் படியளக்கும் திருவிழா நடந்தது.
நேற்று மார்கழி மாத அஷ்டமி திருநாள் என்பதால் திருப்பள்ளி எழுச்சிக்கு பின்னர் ஆனந்தவல்லி, சோமநாதருக்கு பன்னீர், பால், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.அதன்பின்னர் .ரிஷப வாகனத்தில் சோமநாதர், பிரியாவிடை, ஆனந்தவல்லி அம்பாள் சிறப்பு அலங்காரத்துடன் திருமண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.
அதன் பின்னர் அலங்கரிக்கப்பட்ட அஷ்டமி சப்பரத்தில் ஆனந்தவல்லியும், சோமநாதசுவாமி, பிரியாவிடையும் தனித்தனி சப்பரங்களில் எழுந்தருளினார்கள். பின்னர் 4 வீதிகளிலும் சப்பர திருவீதி உலா வந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சாமி திருவீதி உலாவின் போது எறும்பு உள்ளிட்ட ஜீவராசிகளுக்கும் உணவு வழங்கும் விதத்தில் அரிசி உள்ளிட்ட நவதானியங்கள் தூவப்பட்டன. கீழே விழுந்த நவதானியங்களை பக்தர்கள் சேகரித்தனர்.
திருப்புவனத்தில் உள்ள புஷ்பவனேசுவரர்- சவுந்திரநாயகி அம்மன் கோவிலில் மார்கழி மாத தேய்பிறை அஷ்டமியையொட்டி அனைத்து ஜீவராசிகளுக்கும் சிவபெருமான் படிஅளக்கும் திருநாள் வழிபாடு நேற்று நடந்தது. இதையொட்டி சுவாமி, அம்பாள், கணபதி, சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய தெய்வங்களுடன் பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா கோவிலின் உள்ஆடி வீதியில் உலா வந்தது. கொடி மரம் அருகே சுவாமி, அம்பாள் மற்றும் தெய்வங்களுக்கு தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
நேற்று மார்கழி மாத அஷ்டமி திருநாள் என்பதால் திருப்பள்ளி எழுச்சிக்கு பின்னர் ஆனந்தவல்லி, சோமநாதருக்கு பன்னீர், பால், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.அதன்பின்னர் .ரிஷப வாகனத்தில் சோமநாதர், பிரியாவிடை, ஆனந்தவல்லி அம்பாள் சிறப்பு அலங்காரத்துடன் திருமண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.
அதன் பின்னர் அலங்கரிக்கப்பட்ட அஷ்டமி சப்பரத்தில் ஆனந்தவல்லியும், சோமநாதசுவாமி, பிரியாவிடையும் தனித்தனி சப்பரங்களில் எழுந்தருளினார்கள். பின்னர் 4 வீதிகளிலும் சப்பர திருவீதி உலா வந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சாமி திருவீதி உலாவின் போது எறும்பு உள்ளிட்ட ஜீவராசிகளுக்கும் உணவு வழங்கும் விதத்தில் அரிசி உள்ளிட்ட நவதானியங்கள் தூவப்பட்டன. கீழே விழுந்த நவதானியங்களை பக்தர்கள் சேகரித்தனர்.
திருப்புவனத்தில் உள்ள புஷ்பவனேசுவரர்- சவுந்திரநாயகி அம்மன் கோவிலில் மார்கழி மாத தேய்பிறை அஷ்டமியையொட்டி அனைத்து ஜீவராசிகளுக்கும் சிவபெருமான் படிஅளக்கும் திருநாள் வழிபாடு நேற்று நடந்தது. இதையொட்டி சுவாமி, அம்பாள், கணபதி, சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய தெய்வங்களுடன் பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா கோவிலின் உள்ஆடி வீதியில் உலா வந்தது. கொடி மரம் அருகே சுவாமி, அம்பாள் மற்றும் தெய்வங்களுக்கு தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.