வழிபாடு
பூதப்பாண்டி பூதலிங்கசாமி கோவிலில் தைத்திருவிழா கால்நாட்டு நிகழ்ச்சி

பூதப்பாண்டி பூதலிங்கசாமி கோவிலில் தைத்திருவிழா கால்நாட்டு நிகழ்ச்சி

Published On 2021-12-09 06:57 GMT   |   Update On 2021-12-09 06:57 GMT
பூதப்பாண்டி பூதலிங்கசாமி, சிவகாமி அம்பாள் கோவிலில் தை பெருந்திருவிழா அடுத்த மாதம் (ஜனவரி) 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 18-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது
பூதப்பாண்டி பூதலிங்கசாமி, சிவகாமி அம்பாள் கோவிலில் தை பெருந்திருவிழா அடுத்த மாதம் (ஜனவரி) 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 18-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. இந்த திருவிழாவுக்கான கால்நாட்டு நிகழ்ச்சி நேற்று காலையில் நடந்தது.

விழாவானது அடுத்த மாதம் 9-ந்தேதி காலையில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழா நாட்களில் தினமும் இரவு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. தொடர்ந்து திருவிழாவின் 9-ம் நாள் காலையில் தேரோட்டமும், 10-ம் நாள் இரவு தெப்ப உற்சவம் ஆகியவை நடக்கிறது.

இந்தநிலையில் தேரோட்டத்தையொட்டி விழாவின் 9-ம் நாளான 16-ந் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News