வழிபாடு
பத்மாவதி தாயார்

திருச்சானூர் பிரம்மோற்சவ விழா 6-வது நாள்: சர்வ பூபால, கருட வாகன சேவை

Published On 2021-12-06 04:17 GMT   |   Update On 2021-12-06 04:17 GMT
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு கருட வாகன சேவை நடந்தது. இதில் உற்சவர் பத்மாவதி தாயார் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 6-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து 9 மணிவரை சர்வ பூபால வாகன சேவை மற்றும் மாலை 5 மணியில் இருந்து 6 மணிவரை தங்கத்தேரோட்டத்துக்கு பதிலாக சர்வ பூபால வாகன சேவை நடந்தது.

அதைத்தொடர்ந்து இரவு 7 மணி முதல் 8 மணி வரை கருட வாகன சேவை நடந்தது. மேற்கண்ட வாகனங்களில் உற்சவர் பத்மாவதி தாயார் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
Tags:    

Similar News